பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரண்

199



எதிரியால் கைப்பற்றப்படுவதற்கு அருமையுடையதாய்ப் பல்வகை உணவுப் பொருள்களையும் தன்னகத்தே உடையதாய் உள்ளிருந்து போர் புரிதற்கு எளிதாகிய தன்மையுடையது அரண்.

கூழ்-உணவு, நீரது-தன்மையுடையது. 745

6.எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

கோட்டைக்குள்ளே தங்கியிருப்பவர்கட்கு இன்றியமையாது வேண்டிய எல்லாப் பொருள்களும் குறைவறப் பெற்றதாய், போர் நிகழும் போது உள்ளிருந்து போர் புரிந்து காத்தற்குரிய சிறந்த வீரர்களையும் உடையது அரண். 746

7.முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

கோட்டையை முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் கோட்டைக்கு வெளியே இருந்து போர் செய்தும், கோட்டை மதில்களைப் பல்வகைச் சூழ்ச்சிகளால் துளைத்தும், இடித்தும் வேறு என்ன செய்தும் கைப்பற்ற முடியாத அருமையுடையது அரணாகும்.

அறைப்படுத்தல்-பல்வகைச் சூழ்ச்சிகளால் கோட்டையைக் கடக்க முயலுதல், சதி செய்தல், கீழறுத்தல். 747

8.முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

கோட்டையை முற்றுகையிட வந்து சூழ்ந்து கொண்டுள்ள பகைவரை முற்றுகையிடா வண்ணம் தடுத்துத் தாக்க வல்லதும், கோட்டைக்குள் இருப்போரை வெற்றி பெறுமாறு செய்ய வல்லதும் அரண் ஆகும்.

முற்றாற்றி முற்றியவர்-கோட்டையை முற்றுகையிடச் சூழ்ந்து கொண்டுள்ள பகைவர்; பற்றியார் பற்றாற்றி. கோட்டையைப் பற்றாகக் கொண்டுள்ளவரை அந்தக் கோட்டையை விடாமல் இருக்கச் செய்து. 748

9.முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.