பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருமை

265



ஒருமை மகளிர்-தம் கணவரையே தெய்வமாக மதித்து, அவர் கருத்துப்படி மன உறுதியோடு நடக்கும் கற்புடைய மகளிர்; தன்னைத் தானே காத்துக் கொண்டு வாழைக்கை நடத்துதல். 974

5.பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

பெருமைக்கு உரிய குணம் உடையவர், பிறர் செய்வதற்கு அரியனவாய செயல்களைச் செய்து முடிக்கும் வழியில் வழுவாது இருந்து செய்து முடிப்பர். 975

6.சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.

பெரியாரைப் போற்றி அவரது இயல்பினை நாம் அணையாகக் கொள்வோம் என்னும் கருத்து சிறுமையுடையார் அறிவில் புலப்படுதல் இல்லை.

சிறியார் அறிற்விற் சிறியார், குண நலன்களில் சிறுமைபுடையவர்; பேணுதல்-போற்றுதல்; நோக்கு-கருத்து. 976

7.இறப்பே புரிந்து தொழிற்றாம் சிறப்பும்தான்
சீரல் லவர்கண் படின்.

பொருள், பதவி முதலியவைகளால் ஆன சிறப்பும் பெருந்தன்மை அற்ற சிறியாரிடத்தில் பொருந்துமானால், அது வரம்பு கடந்த செயல்களைச் செய்விக்கும் தொழிலையுடையதாகும்.

இறப்பு-வரம்பு கடந்த செயல்; தொழிற்று ஆம்-தொழிலையுடையது ஆகும்; சிறப்பு-பொருள், பதவி முதலியவைகளால் ஆன உயரிய நிலை; சீர் அல்லவர்-சிறப்பற்ற சிறியோர்; படுதல்-பொருந்துதல், தங்குதல். 977

8.பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பெருமைக் குணமானது எக்காலத்திலும் பணிவோடு இருக்கும்; மற்றைச் சிறுமைக் குணமோ தன்னைத் தானே புகழ்ந்து பாராட்டிக் கொள்ளும்.



தி.-18