பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

கொலை அஞ்சார்; பொய்ந் நாணார்; மானமும் ஓம்பார்;
களவு ஒன்றோ, ஏனையவும் செய்வார்; பழியோடு
பாவம் இஃது என்னார்; பிறிது மற்று என் செய்யார்?—
காமம் கதுவப்பட்டார்.78

திருவினும் நல்லாள் மனைக்கிழத்தியேனும்,
பிறன் மனைக்கே பீடு அழிந்து நிற்பர்—நறுவிய
வாயினவேனும் உமிழ்ந்து. கடுத் தின்னும்
தீய விலங்கின் சிலர்.79

கற்பு உடுத்து, அன்பு முடித்து, நாண் மெய்ப் பூசி,
நற்குண நற்செய்கை பூண்டாட்கு—மக்கட்பேறு
என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின், இல் அன்றே,
கொண்டாற்குச் செய் தவம் வேறு.80

ஏந்து எழில் மிக்கான், இளையான், இசை வல்லான்,
காந்தையர் கண் சுவர் நோக்கத்தான், வாய்ந்த
நயனுடை இன்சொல்லான், கேள் எனினும், மாதர்க்கு
அயலார்மேல் ஆகும், மனம்.81

கற்பு இல் மகளின், நலம் விற்று உணவு கொளும்
பொன்-தொடி நல்லாச் நனி நல்லர்;—மற்றுத் தம்
கேள்வற்கும், ஏதிலர்க்கும், தங்கட்கும், தம் கிளைஞர்
யாவர்க்கும், கேடு சூழார்.82

முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்;
நிறையும் நெடு நாணும் பேணார்; பிறிதும் ஒரு
பெற்றிமை பேதைமைக்கு உண்டே? பெரும் பாவம்,
கற்பு இல் மகளிர் பிறப்பு!83

பெண்மை வியவார்; பெயரும் எடுத்து ஓதார்;
கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார்; பண்ணொடு
பாடல் செவி மடார்; பண்பு அல்ல பாராட்டார்;—
வீடு இல் புலப் பகையினார்.84

துயில் சுவையும், தூ நல்லார் தோள் சுவையும். எல்லாம்,
அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி, அயில் சுவையும்
பித்து உணாக் கொள்பபோல் கொள்ப. பிறர் சிலர் போல்
மொத்துணா மொய்ம்பினவர்.85