பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 களை விட்டு ஒழுங்கான முறையில் தொழில் செய்து பிழைத்தல் நல்வாழ்க்கை. ஆறாவது படி நல்லூக்கம், இது மிக மிக முக்கியமானது. நல்லூக்கம் ஒன்று இல்லா விட்டால் மனிதனுக்குக் கடைத்தேற்றமே யில்லை. இதைக் கொண்டுதான் அவன் தன் மன மாசுகளை நீக்கி, நல் லெண்ணங்களை இடைவிடாமல் வளர்த்துச் சித்த உறுதி பெறமுடியும். அடுத்த ஏழாம் படி நற்கடைப்பிடி. உடல் பல கந்தங்களின் சேர்க்கை யென்று தெளிவுற்று, அயர்வைக் களைந்து, நிலைத்த சிந்தையுடனும், ஊக்கத் துடனும், சாந்தியோடு உறுதியுற்றிருத்தலே நற்கடைப்பிடி. புத்தர் பிரான் பிக்குகளுக்கு உபதேசஞ் செய்யும்போதெல் லாம், கருத்தோடிருங்கள்! கருத்தோடிருங்கள்!' என்று இதைக் கொண்டே இடைவிடாது கூறி வந்திருக்கிறார். கருத்தின்மை நரகப் பாதை, கருத்துடைமை சுவர்க்கப் பாதை என்பது அவர் கொள்கை. எட்டாவது படி நல்லமைதி. இதுவரை குறித்துள்ள ஏழு படிகளுக்கும் சிகரமாக அமைந்துள்ளது நல்லமைதி. ஞானத்தினால் ஒருவன் நன்மை தீமைகளைப் பாகுபடுத்தி அறிய முடியுமே தவிர, மனத்தை ஒரு நிலைப்படுத்த முடியாது. மனத்தை ஒரு நிலைப்படுத்துவதுதான் அரிய-மிக அரிய-கலை. சித்தத்தை ஒரு நிலைப்படுத்து.ஆயிரம் யானைகளின்பலம் உண்டாகும்" என்றார் பதஞ்சலியும். இது பயிற்சியினாலேயே கைகூடும். தியானம், சமாதி, யோகம் என்பவை உள்ளத்தை ஒரு முனைப்படுத்தும் கலையேயாகும். உள்ளத் தூய்மை, அன்பு, தெளிவு, அறிவை ஆதாரமாய்க் கொண்ட நம்பிக்கை ஆகியவற்றைப் பெற்ற பின்பே தியானம் அல்லது சமாதி நிலை எளிதாகும். இவ்வாறு எட்டுப் படிகளுள்ள அஷ்டாங்க மார்க்கத்தின்படி நடந்து, தியா னத்தின் மூலம் பரிசுத்தமான எண்ணங்களை வளர்த்து, ஏகாந்த வாசத்தில் இன்பம் பெற முயறசி செய்து வந்தால், முடிவில் முந்திய பிறவிகளின் வரலாறுகளும், எதிர்கால நிகழ்ச்சிகளும், பிரபஞ்சத்தின் நியதியும் தெளிவாகத்