விஞ்ஞானத்தின் கதை/முதல் கிராமம்

விக்கிமூலம் இலிருந்து


4. முதல் கிராமம்

வேளாண்மையை ஆதாரமாகக்கொண்டு நாகரிகம் எனும் குழந்தை விழித்ததாக அறிந்தோம் அல்லவா? நாகரிகம் வளரத்தொடங்கியது உணவைப் பயன்படுத்திக்கொண்ட பின்புதான் என்பதை இப்போது ஆராய்வோம். "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று உயர்ந்த நோக்கம் கொண்டு ஆதிகால மனிதன் வாழ்ந்தானா? இல்லை. தன் குட்டியைத் தானே உணவாகக் கொள்ளுமாமே முதலை, அதைப்போல மனிதனும் ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது.

நிலத்தில் விளைந்த தாவரங்களை உணவாகக் கொள்ளத்தொடங்கிய காரணத்தால் அந்நிலைக்குத் தகுதியான இருப்பிடத்தை மனிதன் நிச்சயித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அனுபவம் மூலமாக, ஆற்றோரம் குடியேறுதல் சாலச் சிறந்ததெனக் கண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். விலங்குகளைக் கொன்று தின்னும்போது தனி வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் வேளாண்மை தொடங்கிய பின் கூட்டு வாழ்க்கையின் தேவை ஏற்பட்டது. குளம் வெட்டுவதோ,ஆற்றிலிருந்து நிலப்பகுதிக்கு வாய்க்கால்கள் அமைப்பதோ தனியொரு மனிதனால் ஆகக் கூடிய காரியமல்ல என்பதை உணர்ந்தே ஒவ்வொருவனும் தனிமை நீக்கி மற்றவனுடன் சேர்ந்து அங்கங்கே குழுக்கள் தோன்றும் சூழ்நிலையை அமைத்தான். ஒவ்வொரு குழுவும் ஆற்றோரங்களில் வெவ்வேறு நிலப் பகுதிகளில் வாழ்ந்து தங்களுக்குவேண்டிய குடியிருப்பு வசதிகளைச் செய்துகொண்டது. இத்தகைய கூட்டு முயற்சியால் வேளாண்மைத் தொழில் முன்னேற்றம் பெற்று மனிதனால் வயிற்றுக் கவலையைச் சற்று மறக்க முடிந்தது.

மாமிச உணவுக்கும் தாவர உணவுக்கும் உள்ள வேற்றுமையை மனிதன் உணர்ந்தான். மாமிச உணவு வேண்டும் நேரத்தில் வேட்டையாடுவதால் கிடைத்து வந்தது. ஆனால் தாவர உணவோ வேண்டும் நேரத்தில்உடனடியாக நிலத்திலிருந்து கிடைக்க முடியாததாக இருந்தது. எனவே தன்னலத்தை முன்னிட்டேனும் தாவர உணவைச் சேமித்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு பருவத்தில் விளைந்த தானிய மணியை அடுத்த பருவம் வரையிலேனும் பாதுகாக்க எண்ணிய ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் ஒரு பொது இடத்தில் தானியத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். அதற்கான காவலையும் கட்டுப்பாட்டையும் தங்களுக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு மனித இனத்தில் தனிமை மறையத் தலைப்பட்டுக் கூட்டுச் சூழ்நிலை அமைந்து முதல் கிராமம் உருவாயிற்று. இப்படியே ஆற்றோரங்களில் அங்கங்கே காலக்கிரமத்தில் கிராமங்கள் பெருகின.

ஒரு கிராமத்தில் விளைந்த உணவு அந்தக் கிராமத்தில் இருந்தவரின் தேவைக்குக் குறைந்த அளவில் மட்டுமே கிடைத்திருக்கலாம். அந்தத் தேவையை- நிரப்ப அக்கிராமம் அடுத்த கிராமத்தை நாடும். அடுத்திருந்த கிராமமோ சில அதிகமான வசதிகளால் அதிக உணவு விளைச்சலைப் பெற்றிருக்கலாம். எனவே ஏதேனும் ஓர் உடன்படிக்கையின்படி ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு உணவுப் பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் அளவைகளும் எண்ணிக்கையும் தோன்றின. உணவுப் பரிமாற்றம் கூடைக் கணக்காகவோ, கைப் பிடிக் கணக்காகவோ நிகழ்ந்ததாக முதலில் கொள்ள வேண்டும். எத்தனைக் கூடை உணவுப் பொருள் கிராமங்களுக்கிடையே பரிமாறப்பட்டன என்று கணக்கிட முதலில் ஒவ்வொரு நேர்கோடாகக் கற்களில் செதுக்கப்பட்டனவாம். இம் முறையைப் பின்பற்றியே உரோமானிய எண்கள் I, II, III..... என்று குறிக்கப் பட்டதாகக் கருத இடமிருக்கிறது. இந்த நிலைக்கு அடுத்து எண்களால் கணக்கிட மனிதன் தன் கைகளையே உதவிக்கு நாடினான். தன் இரு கை களிலும் இருந்த பத்து விரல்களும் முதல் பத்து எண்ணிக்கையாக அமைந்தன. பத்துக்கு மேற்பட்ட எண்களை எண்ணத் தொடங்கியபோது அவன் அம்முறையையே பின்பற்றி பத்தோடு ஒன்று, பத்தோடு இரண்டு என்று எண்ணியிருக்கவேண்டும். கைவிரல்கள் பத்தின் அடிப்படையில் தசாம்ச முறை எண்ணிக்கை தொடங்கியது.

இத்தகைய அனுபவத்தின்போது ஒரு கூடையளவுக்குக் குறைவான தானியத்தையும் அவன் கூடையில் நிரப்பிப் பரிமாற வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? அப்படியானால் அக்குறையை அல்லது கூடையில் இருந்த திட்டவட்டமற்ற தானியத்தை எப்படிக் கணக்கிடுவது? இந்தக் கேள்வி எழுந்தபோது தான் அளவையின் பிறப்பு ஏற்பட்டது. முதலில் பெரிய அளவை, அடுத்து அதைவிடச் சிறியது... ..... இப்படி அளவைகள் தொடர்ந்து பெருகியிருக்கவேண்டும். எண்ணிக்கையும், அளவையும் உலகில் நாகரிகத்தை வேகமாகப் பரவச் செய்தன.

அருகருகே அமைந்திருந்த கிராமங்களில் விளைந்த உணவுப்பொருளைத் தேக்கிவைத்தனர். பின்னர் அவை யாவும் குறிப்பிட்டதொரு கிராமத்தை அடைந்தன. காலக்கிரமத்தில் உணவுப் பரிமாற்றம் முழுவதும் அக்கிராமத்தில் நடைபெற வேண்டிய சூழ்நிலை அமைந்தது. நாகரிகம் பெருகப்பெருக அக்கிராமத்தின் முக்கியத்துவம் அதிகமாகி அது நகரம் என்ற பெயர் பெற்றது. நகரம் என்பது நாகரிகத்தின் உயிர் எனப் பொருள்படும்.

சேமித்து வைக்கப்பட்ட உணவையும், உணவுப் பரிமாற்றத்தையும் கவனிக்கத் தனிப்பட்டதொரு குழு அமைக்கப்பட்டது. அதற்குத் தலைவன் ஏற்பட்டு அரசன் எனப் பெயர் பெற்ருன். இம் மாற்றத்தைப் பிணைத்தபடிச் சில சட்ட திட்டங்கள் உருவாயின.

குழுக்கள் ஒழுங்குற இயங்க அரசனே காரண மானவனுய் இருந்தான். தவறு நடக்குமிடத்து அவற் றைச் சீர்திருத்த அவனுக்கு முழு உரிமை இருந்தது. அத்தகைய சட்டங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

1. ஒரு மனிதன் இன்னொருவனுடைய கண்ணேப் பழுதாக்கினல் அவர்கள் (சட்டக் குழுவினர்) துன்புறுத்தியவனின் கண்ணைப் பழுதாக்கலாம். அல்லது குறிப்பிட்ட அளவுடையதொரு வெள்ளிக் கட்டியைக் கொடுத்து ஈடுகட்டலாம்.

2. ஒருவன் அடுத்தவனுடைய எலும்பை முறித் தால் அவர்கள் அவனது எலும்பை முறிக்கலாம்.

3. ஒருவன் இன்னொருவனுடைய அடிமையின் கண்ணைப் பழுதாக்கினல், எலும்பை முறித்தால், அந்த அடிமை வாங்கப்பட்ட விலையில் பாதித் தொகையைக் கொடுத்து ஈடு கட்டலாம்.

ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கு உண வப் பொருளை நதியின் வழியாக எடுத்துச்செல்ல படகுகள் பயன்பட்டன. நிலத்தின் வழியாக இத் தகைய போக்கு வரவு வண்டிகளின் மூலமாக நடை பெற்றது. முதலில் வண்டிகள் மனிதர்களாலேயே இழுத்துச் செல்லப்பட்டன. உலோகக் காலம் தோன் றியபின் வண்டி சீர்திருத்தப்பட்டு விலங்குகளால் இழுக்கப்பட்டன.

கால ஓட்டத்தின் முன்னேற்றத்தால் பல்வேறு வகைப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்று விஞ் ஞானிகள் உணவுப் பெருக்கத்திற்கு அடிகோலியிருக் கிருர்கள். மழைக் குறைவால் விளைவிக்கப் படாது பாழாக விடப்பட்ட நிலங்களெல்லாம் இன்று பயிர்த் தொழிலுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. வேளாண்மைத் துறையில் ஈடுபட்டிருக்கும் அறிவியலாரின் கவனத்தை இன்று கவர்ந்திருப்பது நிலப்பரப்புக்குத் தகுதியான விதைகளை உற்பத்தி செய்து பயன்படுத்துவது ஆகும். எடுத்துக் காட்டாக, குளிர் மிகுந்த நிலப்பரப்புக்களில் விளைவதற்கு ஏற்ற புதுவிதமான கோதுமை விதைகளை அவர்கள் இப்போது கண்டுபிடித்திருக்கிருர்கள். இதேபோன்று பாலை நிலங்களில் விளையக்கூடிய விதைகளையும் தேர்ந்தெடுத்திருக்கிருர்கள். விளையும் பயிர்களைப் பூச்சிகள் அரித்துவிடாமலும் பயிர்கள் சாவியாகாமலும் இருக்க விஞ்ஞானிகள் வழிகள் கண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விளைச்சலின் போதும் எலிகள், வெட்டுக்கிளிகள் போன்றவற்றால் உணவுப் பொருள்களுக்கு சேதமேற்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஐந்நூறு கோடி ரூபாய் பெறுமான உணவுப்பொருள் இவ்வாறு பாழடிக்கப்படுகிறது.

நமது உணவுக்கு இன்னொரு முக்கிய எதிரி பருவ நிலை. இதிலிருந்து உணவைப் பாதுகாக்கப் பலமுறைகள் கையாளப்படுகின்றன. காற்றுப் புகாத பாத்திரங்களில் உணவை அடைத்து வைத்தல் ஒரு முறை. இதனால் காற்றின் வழி மிதக்கும் கிருமிகள் உணவுப் பொருளை அடைந்து தீங்கு செய்யமுடியாதவாறு தடை செய்யப்படுகின்றன. உணவுப் பொருளிலிருந்து நீர்ப் பகுதியைத் தனியே பிரித்துவிடுதல் இரண்டாவது முறை. இம்முறையினால் தண்ணீரில் கிருமிகள் வளர்ந்து பொருளை அழுகும்படிச் செய்வது தடைப் படுத்தப்படுகிறது. மூன்றாவதாகக் குளிர வைக்கும் முறை. மிகவும் குளிர்ந்த சூழ்நிலை அமைந்த பெட்டியில் உணவுப் பொருளை வைத்திருப்பதே இம்முறை. இதனால் தகுந்த வெப்பம் இல்லாது கிருமிகள் அழிகின்றன. ஆக, உணவு கெடுவது தடுக்கப்படுகிறது. இத்தகைய பாதுகாப்பு முறைகள் உணவின் அளவைப் பெருக்கா விட்டாலும் சேமித்து வைக்கப்பட்ட உணவைப் பாதுகாக்கின்றன. இதுவே ஒருவகை வளர்ச்சிதானே!