50
"அந்த மனுசன் யாராம்?"
"எனக்குத் தெரிஞ்சவர்னு சொன்னேனே...”
"தெரிஞ்சவர்னா...?"
"எனக்கு அண்ணன்!’’
"கூடப் பிறந்த அண்ணனா?”
"கூடப் பிறக்காத அண்ணன்.’’
ரேவதிக்கு நல்ல மூச்சுத் திரும்பியது. "பேர் என்னவாம்?’’
"ஞானசீலன்னு பேருங்க, டாக்டரம்மா.’’
"ஒகோ..."
நாயர் இடைமறித்தார். "அம்மேக்குச் சாயா போடட்டே? எங்க குழலிக்கும் அந்தச் சேட்டன் மாதிரி சாயா தான் இஷ்டம்.”
ரேவதியின் நீலக்கடல் விழிகள் கோலம் போட்ட மாதிரி வியப்பில் விரிந்தன. தேடி வந்த தேனிரை தேட்டமுடன் பருகினாள். இரண்டு சாயாவுக்கும் பைசா கொடுத்தாள். பிறகு தன் காரை - அண்டினாள். தேய்பிறை இருட்டிலும் குழவியின் முகம் பளிச்சென்று தெரிந்தது. 'நீ எப்ப வேலைக்கு வர்றே?’ என்று கேட்டாள்.
“அதை டாக்டரம்மாதான் முடிவு செய்யனும்; அது தான் நியாயம்.”
"அப்படின்னா, நீ நாளைக்குக் காலையிலேயே வேலைக்குச் சேர்ந்திடேன். நாளைக்குத் திங்கட்கிழமை. திங்கட்கிழமைன்னா எனக்கு வெகுவாகப் பிடிக்கும்."
"ஓ... வாய் கொண்ட மட்டும் சிரித்தாள், பூஞ்சிட்டு கன்னி. எங்கள் அண்ணனுக்கும் திங்கட்கிழமைன்னாரொம்பவும் இஷ்டம் டாக்டரம்மா.