இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
288
பல்லவர் வரலாறு
அரசன் - அரசி ஒவியங்கள்
வலப்புறத் தூணின் உட்புறத்தில் ஒர் அரசன் தலையும் அவன் மனைவி தலையும் தீட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் மணிமாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் இலங்குகின்றன. தலையில் மணி மகுடம் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட அந்த முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மகேந்திரவர்மன் முகத்தையே பெரிதும் ஒத்துள்ளது. ஆதலின், அவ்வுருவம் மகேந்திரவர்மனதே என்று அறிஞர் முடிவுகொண்டனர். அண்மையில் உள்ளது.அரசியின் முகம் ஆகும். அந்த அரசியின் கூந்தலும் தலைமீதுதான் அழகுடன் முடியப்பட்டுள்ளது. இத்தகைய முடிப்பு இயல்பாகவே அக்கால அழகிகள் கொண்டமுடிப்போ இன்ப நிலையில் போட்டுக்கொண்ட முடிப்போ விளங்கவில்லை.
![](http://upload.wikimedia.org/wikisource/ta/thumb/e/e2/Page308-776px-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf.jpg/500px-Page308-776px-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf.jpg)