இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
242
தமிழ்நாடும் மொழியும்
32. | பல்லவர் அரசாண்ட காலத்தில் தமிழ் வளர்ந்த வரலாற்றைச் சுருக்கி வரைக. |
33 | பாண்டித்துரைத் தேவர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றையும், அச்சங்கத்தினுல் தமிழுக்கு விளைந்த நன்மைகளையும் விளக்கிக் கூறுக. |
34 | தமிழில் வழங்கும் ஐரோப்பிய மொழிச் சொற்களை வகைப்படுத்திக் காட்டுக. [அக். 1949] |
35 | "பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே
கிடந்து சங்கத்- - திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை”' -இக்கவியிலுள்ள கருத்துக்களை ஆராய்க. |
36 | தென்னாட்டில் திருமடங்கள் தோன்றித் தமிழ் வளர்த்த வரலாற்றைச் சுருக்கி எழுதுக. |
37 | “தமிழ்நாட்டுத் திருக்கோவில்கள் கலைக் கோவில்களாகவும் திகழ்ந்தன -இவ்வுண்மையை விளக்குக. |
38 | திரிசொல், திசைச் சொல்-இவற்றின் தன்மையை விளக்கி உதாரணந் தருக. |
39 | “தமிழ்நாட்டின் சீர் ஒங்கி இருந்த காலமே தமிழ் மொழி சிறப்புற்றிருந்த காலம்” -இக்கொள்கையை ஆராய்க. [நவ. 1950] |
40. | செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற பாகுபாடு எந்த அடிப்படையின்மேல் எழுந்தது? அதனால் அறியக் கிடக்கும் மொழி வரலாறென்ன? |
41 | தமிழிலக்கணத்தில் உள்ள உயிர், மெய், ஆய்தம், உயர்திணை, அஃறிணை என்னும் குறியீடுகள் பாராட்டத் தக்க முறையில் அமைந்துள்ளன என்பதை விளக்குக. |