310
சங்க இலக்கியத்
“பைது அறவிளைந்த பெருஞ்செந் நெல்லின்
தூம்பிடைத் திரள்தாள் துமித்த வினைஞர்
பாம்புறை மருதின் ஓங்கு சினைநிழல்
பலிபெறு வியன்கள மலிய வேற்றி”-பெரும்பா. 230-233
மேலும் காவிரியாற்றில் ஒரு பெருந்துறை; அதில் பலரும் நீராடுவர். அங்கு ஒரு பெரிய மருத மரம் உள்ளது. அதில் சேந்தன் தந்தையின் யானை பிணிக்கப்பட்டுள்ளது என்பர் பரணர்.
“. . . . . . . . . . . . . . . . காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன்தந்தை”-குறுந். 258 : 2-3
வையையாற்றின் திருமருத முன் துறையில் தலைமகனும், தலைமகளும் புனற்கண் நீரணி இன்பந் துய்த்த செய்தியை மையோடக் கோவனாரும் (பரிபா. 7) திருமருத நீர்ப்பூந்துறையின் தைந் நீராடும் செய்தியை நல்லந்துவனாரும் (பரிபா. 11) விரித்துரைப்பர்.
“உரும்இடி சேர்ந்த முழக்கம் புரையும்
திருமருத முன்துறை சேர்புனற்கண் துய்ப்பர்”
பரிபா. 7 : 83-84
மேலும், வையை யாற்றின் வார்மணல் கூடிய அகன்ற துறையில் ஓங்கி வளர்ந்த மருத மரக்காவில் வதுவை அயர்தலும் கூறப்படுகின்றது.
“வருபுனல் வையை வார்மணல் அகன்துறை
திருமரு தோங்கிய விரி காவில்
நறும்பல் கூந்தல் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப . . . . .”-அகநா. 36 : 9-12
மருதம் ஓங்கிய இம்மலர்க் காவில் காஞ்சி மரமும், மாமரமும் வளர்ந்திருக்குமென்றும் பதிற்றுப்பத்து கூறும்.
“மருதுஇமிழ்ந்து ஓங்கிய நறுஇரும் பரப்பின்
மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு”
-பதிற். 23:18-19