இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
481
6 வெண்மையான இதழ்கள் விரிந்தும் காணப்படும். அழகும், நறுமணமும் உளள, ஒழுங்கானது. காம்பற்ற மலரடிச் செதில்களின் கட்கத்தில் உண்டாகும். | ||
மலரடிச் செதில் | : | சிறியது. 20-25 X 5-6 மி.மீ. நீள, அகலமுடையது. |
புல்லி வட்டம் | : | முட்டை–உருளை வடிவான 6-7 மி.மீ. நீளமானது. நேர்த்தியானது. 6 பிளவாகப் பிரிக்கப்பட்டிருக்கும். |
அல்லி வட்டம் | : | அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவானது. ஆரஞ்சு நிறமானது. மடல்கள் 4-6 விரிந்து வெண்மை நிறமாக இருக்கும். |
மகரந்த வட்டம் | : | 2 தாள்கள் அல்லிக் குழல் உச்சியில் காம்பில்லாமல் இருக்கும். |
சூலக வட்டம் | : | சூற்பை 2 சூலறை கொண்டது. ஒவ்வோர் அறையிலும் ஒரு நேரான சூல் அடித்தளத்தில் அமைந்திருக்கும். |
சூல் தண்டு | : | சூல் தண்டு உருளை போனறது. சூல்முடி குறுகியது. இரு பிளவானது. |
கனி | : | ஒரு வட்ட வடிவக் காப்சூல் (Capsule) இருபுறமும் அமுங்கித் தடுப்புச் சுவருக்கு இணையாக இருக்கும். முற்றியவுடன் இரு ஒற்றை விதை கொண்ட அறைகளாகப் பிரியும். |
விதை | : | நேரானவை. தட்டையானவை. புற உறை மெல்லியது. முளைசூழ் தசையில்லை. வித்திலைகள் தட்டையானவை. முளைவேர் கீழ் மட்டமானது. |
இச்சிறுமரம் பெரிதும் இலையுதிர் காடுகளில் 3000 அடி உயரமான இடங்களில் வளர்கின்றது. இந்தியா முழுவதிலும் வளர்ககப்படுகிறது. இதன் மஞ்சள் நிற அல்லிக் குழல்கள் ஆரஞ்சு நிற சாயத்தைக் கொடுக்கும். இதன் மலர்கள் மாலையில்