289
“. . .. . .. . .. . . . தழையோர்
கொய்குழை அரும்பிய குமரிஞாழல்”-நற். 54 : 9-10
“பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு”
இறை. அகப். நூற்பா உரை.
ஞாழல், நெய்தல் நிலத்துக் கடற்கரையில் மணற்பாங்கில் நீர் ஓடுகின்ற காவிடத்தே நிழல் பரப்பித் தழைத்து வளரும் என்றும், இதன் முதிர்ந்த பூங்கொத்தைத் தலை முடியில் கமழ முடிப்பர் என்றும் புலவர்கள் கூறுவர்.
“கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண்திரை மணிப்புறம்தை வரும்”-நற். 54 : 10-11
“எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ”-ஐங். 141
“ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்
கொழுநிழல் முதிர் இணர் கொண்டு
கழும முடித்து. . . . . . . . . . . . . . . . ”-கலி, 56 : 1-3
‘ஞாழல் ஓங்கிய’ , ‘கருங்கால் ஞாழல்’ ‘சிறியிலைப் பெருஞ்சினை’ , ‘கருங்கோட்டு இருஞ்சினை’, ‘கொழுநிழல் ஞாழல்’ என்றெல்லாம் கூறப்படுதலின் ‘ஞாழல்’ ஒரு சிறுமரம் எனக் கொள்ள இடமுண்டு.
மேலும், நல்லந்துவனார் இளவேனிற் காலம் வந்த அழகைப் புலப்படுத்துவதற்கு இணர் ஊழ்த்த பல மரங்களைக் கூறுகின்றார். அவற்றுள் ஒன்று, சாமனைப் போல மஞ்சளும், செம்மையுமான நிறம் விளங்கிய ஞாழல் மலர்ந்துள்ளது என்று கூறுகின்றார். இவர் இங்கே குறிப்பிடும் மலர்கள் அனைத்தும் சங்க இலக்கிய மரங்களின் மலர்கள் ஆகும்.
“ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்
பருதியம் செல்வன்போல் நனைஊழ்த்த செருந்தியும்
மீன்ஏற்றுக் கொடியோன்போல் மிஞிறுஆர்க்கும் காஞ்சியும்
ஏனோன்போல் நிறம்கிளர்பு கஞலிய ஞாழலும்
ஆன்ஏற்றுக் கொடியோன்போல் எதிரிய இலவமும் ஆங்குத்
தீதுசீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல
போதுஅவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற
நோதக வந்தன்றால் இளவேனில் மேதக”-கலித். 26 : 1-6
73-19