உய்யக்கொண்டார் அருளிச்செய்தது
உய்யக்கொண்டார் அருளிச்தெய்தது இருவிகற்ப நேரிசை வெண்பா அன்ன வயற்புதுவை ஆண்டாள் *அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் * இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை *பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை* பாடி அருளவல்ல பல்வளையாய்* நாடிநீ வேங்கடவற்கு என்னை விதிஎன்ற இம்மாற்றம்* நாங்கடவா வண்ணமே நல்கு.