இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சந்திரனைப் போல்தோசை !
சுவையுள்ள அதிரசங்கள்,
வெந்துபல மடைந்த
கொழுக்கட்டை, கிழங்குவகை,
வளைந்த நிலாப்பிறையின்
வடிவத்தைக் காட்டுகின்ற
சுளையுள்ள நாசத்தை,
சத்துள்ள வேர்க்கடலை,
சுற்றிவைத்த கம்பிச்
சுருள்முறுக்கு, நாவல்மரம்
பெற்றெடுத்துக் கொடுத்த
பழங்கள்-இவற்றை எல்லாம்
அங்காடிக் கூடையிலே
எடுத்துவைக்கும் தன்மகளை
மங்கம்மா பார்த்து,
”மாங்குவிலே! மனைவிளக்கே!
இடித்துவைத்த மாவை,
எடுத்துஒரு பானையில்வை.
கடிக்கின்ற குரங்கின்
கைவிாலைப் போலிருக்கும்
8