இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டில்லிக்குப் போனேன்;
நேருவைப் பார்த்தேன்;
‘சல்யூட்’ செய்தேன்;
சாக்லேட் தந்தார்.
“என்னடா கண்ணு
ஏதட வேணும்?
சொன்னால் தருவேன்
சொல்வாய்” என்றார்.
“அன்புள்ள மாமா,
அவசியம் வேணும்.
சின்னதாய் யானை
சீக்கிரம் தருவீர்,”
என்றேன். உடனே
எடுத்தார் காகிதம்
என்னவோ அதிலே
எழுதிக் கொடுத்தார்.
பார்த்தேன் அதையே.
படத்தில் யானை!
பார்த்தேன் அவரை;
'பக் கெனச் சிரித்தார்.
55