இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவர்க ளுக்கு நடுவிலே
அழகு வெள்ளைப் புறாவினை
ஜவஹர் பறக்க விட்டனர்.
‘சர்’ ரென் றுயரச் சென்றது,
வட்ட மிட்டுத் திரிந்தது
வானில் சிறிது நேரமே.
சட்டென் றிறங்கி வந்தது.
ஜவஹர் தலையில் அமர்ந்தது.
வெள்ளைக் குல்லா மீதிலே
வெள்ளைப் புறா அமர்ந்ததும்,
பிள்ளை யெல்லாம் மகிழ்ந்தனர்;
பெரிதும் கூச்சல் போட்டனர்.
தலையில் வெள்ளைப் புறாவுடன்
சாந்தம் தவழும் முகத்துடன்
சிலைபோல் நேரு நின்றனர்,
சிறுவர் பார்த்து மகிழவே.
நேரு பிறந்த நாளிலே
நிகழ்ந்த இந்தக் காட்சியை
நேரில் பார்த்தோர் இந்தநாள்
நினைத்துப் பார்த்தே மகிழ்கிறார்!
50