இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 7. வாழ்வீர்!
கடல்சூழ்ந்த தென்னிலங்கைத் தமிழ மக்காள்!
கடல்கடந்த என்னினத்தீர்! உங்கட் கென்றன்
மடலாகும் தமிழ்க்கவிதை விடுக்கும் முன்னர்
வாயார்ந்த என்வணக்கம் விடுத்தேன்; ஏற்பீர்!
உடலாகும் உயிரொத்த தாய கத்தை,
உயர்மொழியாம் தமிழ்மொழியை, உங்கள் வாழ்வைத்
தொடரவரும் பகைவீழ்த்தி, அறத்தை ஓம்பித்
தொல்புகழை நிலைநாட்டி வாழ்வீர் நீடே!
- 83