தமிழ்ப் பழமொழிகள்
179
கொட்டிக் கொட்டிக் குளவி புழுவைத் தன் நிறத்துக்கு ஆக்கி விடும்.
கொட்டிய பாலின் முன் கூவி அழுது ஆவதுண்டா?
கொட்டினால் தேள்; கொட்டா விட்டால் பிள்ளைப்பூச்சி.
கொட்டும் பறை தட்டம் அறியாது.
கொட்டை நூற்கிற அம்மாளுக்குப் பட்டணம் விசாரிப்பது ஏன்? 9655
- (பட்டணத்து விசாரணை.)
கொட்டை நூற்கும் கூனற் கிழவி.
கொட்டை நூற்றுச் சம்பாதித்துக் கெட்டுப் போயிற்றா?
கொட்டோடே முழக்கோடே வந்தவன் எட்டோடே இழவோடே அல்லவா போவான்?
- (எட்டாம் நாள் படைக்கும் நாள். சோழநாட்டு வேளாளரிடையே வழங்குவது. }
கொடாக் கண்டன், விடாக் கண்டன்.
கொடாக் கண்டனும் விடா கண்டனும் கூடினாற் போலே. 9660
கொடாத இடையன் சினை ஆட்டைக் காட்டினது போல.
கொடாதவன் எருமைப் பாலும் கொடான்.
கொடாதவனுக்குக் கூத்துப் பறி; இடமாட்டாதவனுக்கு எச்சில்.
கொடிக் கம்பத்தைப் பயற்றங்காயாய்த் திண்பவருக்குக் கோபுரம் கொழுக்கட்டை.
கொடிக் காலில் மின்னினால் விடிகாலை மழை. 9665
கொடிக்குக் காய் கனமா?
- (பாரமா?)
கொடிக்குக் கும்மட்டிக் காய் கனத்திருக்குமா?
கொடிக்குச் சுரைக்காய் கனமா?
- (கனக்காது.)
கொடிகள் அருகான மரத்திலே படரும்.
- (அருகிலுள்ள மரத்திலே தாவும்.)
கொடி சுற்றிப் பிறந்த பிள்ளை குலத்திற்கு ஆகாது. 9670
- (பெண் பிறந்தால்.)
கொடிசுற்றிப் பிறந்தால் கோத்திரத்துக்கு ஆகாது.
கொடியும் பெண்டிரும் கொண்டதை விடார்.
கொடிறும் பேதையும் கொண்டது விடா.