82
தமிழ்ப் பழமொழிகள்
துரை நாய்ச்சியார் கும்பிடப் போய்ப் புறப்பட்ட ஸ்தனம் உள்ளே போச்சுது.
துரை வீட்டு நாய் நாற்காலி மேல் ஏறினது போல. 12995
துரை வீட்டு நாயைக் கண்டு தோட்டி நாய் கறுவினாற் போல.
துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல்.
துரோபதையைத் துகில் உரிந்தது போல.
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை. 13000
துலுக்குக் குடியில் ஏது பேயாட்டம்?
துலுக்கச்சிக்கு எதற்கு உருக்கு மணி?
துலுக்கத் தெருவிலே ஊசி விற்றது போல.
துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினது போல.
- (திருவெம்பாவை.)
துலுக்கன் உடுத்துக் கெட்டான்; பார்ப்பான் உண்டு கெட்டான். 13005
துலுக்கன் கந்தூரி தூங்கினால் போச்சு.
துலுக்கன் செத்தால் தூக்குவது எப்படி?
துலுக்கன் துணியால் கெட்டான்; பார்ப்பான் பருப்பால் கெட்டான்.
துலுக்கன் புத்தி தொண்டைக்குழி வரைக்கும்.
துலுக்கன் வீட்டில் துணிக்கு என்ன பஞ்சம்? 13010
துலுக்கனுக்கு ஏன் துறட்டுக் கடுக்கன்?
துவி நாக்கு இடறும்.
துவைத்துத் தோள்மேற் போட்டுக் கொண்டான்.
துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல; வினாவிக் காட்டாதது கல்யாணமும் அல்ல.
- (வினாவிச் செய்யாதது.)
துள்ளாதே, துள்ளாதே ஆட்டுக்குட்டி. என் கையில் இருக்கிறது சூரிக் கத்தி. 13015
துள்ளாதே, துள்ளாதே, குள்ளா, பக்கத்தில் பள்ளமடா.
துள்ளிக் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப் பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது.
துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.
துள்ளின மாடு பொதி சுமக்கும்.
துள்ளுகிற கெளுத்துச் செத்துப்போகிறது தெரியாதா? 13020