தமிழ்ப் பழமொழிகள்
211
பார்ப்பானில் ஏழையையும் பசுவில் ஏழையையும் நம்பக் கூடாது.
- (ஏழை-நோஞ்சான்.)
பார்ப்பானுக்கு இடம் கொடாதே; பறையனுக்கு அம்பலம் கொடாதே. 16085
- (இடம்-இடப்பக்கம்.)
பார்ப்பானுக்கு இடம் விடாதே.
பார்ப்பானுக்குப் பல்லில் விஷம்.
பார்ப்பானுக்குப் பிறப்பு; கோவிலிலேயும் சிறப்பு.
- (பார்ப்பானுக்குப் பறப்பு, கோவிலுக்கும் சிறப்பு.)
பார்ப்பானுக்குப் புத்தி பிடரியிலே.
பார்ப்பானுக்கு மூத்த பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச்சாதி ஆனான். 16090
பார்ப்பானுக்கு வாய் போக்காதே; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே.
பார்ப்பானுக்கு வாய் போக்காதே; தாதனுக்குத் தலை அசைக்காதே; ஆண்டிக்கு அதுதானும் செய்யாதே.
பார்ப்பானுக்கு வாய் போக்கு; ஆண்டிக்கு அதுதானம் இல்லை.
பார்ப்புக்கு இடமும் பள்ளுக்கு வலமும் கொடுக்காதே.
பார்யா ரூபவதீ சத்ரு. 16095
பாரத்வாஜ மத்யஸ்தம்.
- (பாரத்வாஜம்-கரிக்குருவி.)
பாரதம் பாட்டு அறாது; ராமாயணம் பொருள் அறாது.
பாரதமாகச் சொல்ல வேனும்.
பாரதமாய் விளைகிறது.
பார புத்தியுள்ள பறவை பதரால் பிடிபட்டது. 16100
- (பலரால்.)
பாராத உடைமை பாழ்.
- (பாராத பண்டம்.)
பாராத காரியம் பாழ்.
பாராதே கெட்டது பயிர்; ஏறாதே கெட்டது குதிரை; கேளாதே கெட்டது கடன்.
பாரியாள் ரூபவதி பர்த்தாவுக்கு நாற்றம்.
பாருக்கும் உண்டு பாம்புச் செவி, 16105