88
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வேண்டும். அந்த வழியை நமக்குக் காட்டும் கருத்து எது? அக்கருத்தினை வழங்கும் நூல் எது? அது உலகப் பொது மறையான திருக்குறள் ஒன்றே.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
இந்த உலகம் விரிந்தது, பரந்தது. கட்புலனுக்கு வந்துள்ள உலகமே நமக்குத் தோன்றுகிறது. கட்புலனுக்கு வராத உலகமும் உண்டு. இந்த விரிந்த உலகம் உயிரினங்கள் வளர்ந்து வாழவே. இயற்கையின் மாறுபாடுகளால் உலகம் பிரிக்கப்பட்டிருக்கிறது. உலகத்தை இயற்கையில் பிரித்திருப்பது வேலியல்ல; இயற்கையின் சின்னங்களே!
ஆழமான கடல்கள்! உயரமான மலைகள்! இவைகளே இன்று உலகத்தைப் பிரித்துக் காட்டும் எல்லைகள்! இவையும் நிலையான எல்லைக்கோடுகளல்ல. இன்று கடலாக இருப்பவை ஒரு காலத்தில் மலையாகவும், இன்று மலையாக இருக்குமிடங்கள் ஒரு காலத்தில் கடற் பகுதியாகவும் இருந்துள்ளன. ஊழி மாற்றங்கள் உலகத்திற்கு உருமாற்றங்கள் தந்துள்ளன. அதனால், உலகம் முழுவதும் ஒருநாடே என்ற சிறந்த உணர்வு தோன்ற வேண்டும்.
தகுதி வாய்ந்த மனிதர்கள் என்றும் எல்லைகளைக் கடந்தே வாழ்ந்து வந்துள்ளனர். எல்லைகள் சிறுமைத் தனமுடையன. எல்லைகளைக் கடந்து அன்பு பாராட்டுதல் உயரிய பண்பு. மனித சமுதாயத்தின் தொடக்க காலத்தில் நாடு, எல்லை நிர்ணயிப்புப் போராட்டங்கள் இருந்ததில்லை.