திருவருட்சிந்தனை
187
இறைவா, ஈசா, நின்னடி போற்றி! போற்றி! வினாக்கள், வளர்க்கும் பான்மை உடையன. அறிவைத் தரும் தன்மை உடையன.
ஆனால், என்னுடைய வினாக்கள் என்னை விளக்க முறச் செய்யவில்லை; என் அறிவை வளர்க்கவில்லை. என்னையே வளர்க்கவில்லை. ஆனால், மாறாக மற்றவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கின்றன. இறைவா, இதில் என்ன பயன் ?
சாமர்த்தியங்கள் சாதனைகளாகிவிடா. இறைவா, நானே அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பலப்பல உள. இறைவா, நான் மற்றவர்களை வினாக்கள் கேட்பதைவிட நான் எனக்கே வினாக்களைக் கேட்டுக் கொள்வது பயன் தரும்.
"நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்?" என்று மாணிக்கவாசகர் தம்மைத் தாமே வினாக்கள் கேட்டுக் கொண்டார். இதனால், "நானும் பொய். என் நெஞ்சும் பொய். என் அன்பும் பொய்” என்று உண்மை நிலை கண்டார், தெளிந்தார், அழுதார். நின்னருள் பெற்றார். இறைவா, அங்ஙனமே நான் என்னைக் காணுதல் வேண்டும். உள்ளவாறு காணுதல் வேண்டும்.
என் உள்ளத்தின் பொய்மைகளைக் களைதல் வேண்டும். ஞானத்தினை அடைதல் வேண்டும். இறைவா, அருள் செய்க! புறத்தே ஓடித் திரியும் என் அறிவு வேட்கையை அகத்தே திருப்பியருள்க! நானே எனக்கு நல்லவனாக வாழ்ந்தால் நல்லது. இறைவா, அருள் செய்க.