திருவருட்சிந்தனை
183
வரைந்து கொண்டு வாழும் உரிமை வழங்கியருள்க!
இறைவா, உன்னை நான் நம்புகின்றேன். தொழுகின்றேன். உனக்கு நான் பயப்படுகிறேன். இது உண்மை. இறைவா, ஒரு வேண்டுகோள். நான் உன்னை நம்பித் தொழுகின்றேன். உனக்குப் பயந்தே என் வாழ்க்கையை நடத்துகின்றேன்.
ஆனால் நான் என் வாழ்க்கையை நான் விரும்பும் வகையிலேயே சுதந்தரமாக நடத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் உன்னுடைய ரப்பர் முத்திரையாக, மையொற்றித்தாளாக இருக்க ஆசைப்படவில்லை.
நான் என் சொந்தமாக வாழ ஆசைப்படுகிறேன். நான் என் வாழ்க்கைக்குரிய வரைபடத்தை வரைந்து கொண்டு நடத்த உரிமை வேண்டும்! இயற்கை நியதிகள் கூட என்னைத் தீண்டாத வண்ணம் அருள் செய்க! நானே திட்டமிடுவேன். என் வாழ்க்கையை நானே உருவாக்கிக் கொள்வேன்.
நான் எனக்காகவும் இந்த உலகத்திற்காகவுமே உழைத்து வாழ்வேன். இரந்து வாழும் வாழ்வு எனக்கு வேண்டாம். நான் என் பொறுப்பை உணர்கிறேன்.
நானாக வாழும் வாழ்க்கையை அருள்செய்க! நான் என் சொந்தப் பொறுப்பில் இந்த வையகத்தை உண்பித்து வாழ்ந்திடும் திறனைப் பெற்றுள்ளேன். என்னைச் சுதந்தரமாக வாழ்ந்திட அருள்செய்க! ஆனாலும் நான் உன் அடிமையே.
நான் உன் உழைப்பால் கருணையினால் வாழாமையை அருள்செய்க! நான் என் கடமைகளைச் செய்கின்றேன். தொடர்ந்து செய்கிறேன். இறைவா, அருள் செய்க!