ஆறுகள்
472
ஆறுகளின் வேலை
போவதால் ஆற்று ஒழுக்குக் குறையும். உறைந்த நீர் கோடையில் உருகி, ஆற்றில் நீர் அதிகமாகும். கானடாவிலும் சைபீரியாவிலும் உள்ள ஆறுகள் இத்தகையவை. பெரிய ஆறுகளில் இத்தகைய பருவ மாறுபாடுகள் மிகச் சிக்கலானவை. ஏனெனில் இவற்றின் உபநதிகளின் ஒழுக்கு ஒரேவகையாக மாறுவதில்லை. உபநதிகளின் நீர் ஆற்றை அடையச் சிறிதுகாலம் செல்வதும் இதற்கு ஒரு காரணமாகும்.
ஆறு |
நீளம் |
வடிநிலத்தின் |
சராசரி |
ஆமெசான் .... |
4,000 | 2,368 | 3,300 |
காங்கோ .... |
2,900 | 1,430 | 4,500 |
பரானா .... |
2,200 | 1,100 | 970 |
யாங்ஸி .... |
3,200 | 700 | 800 |
மிசிசிப்பி .... |
4,240 | 1,258 | 700 |
எலிசி(சைபீரியா) .... |
3,240 | 968 | 620 |
பிரம்புத்திரா .... |
1,240 | 280 | 620 |
லேனா (சைபீரியா) .... |
2,850 | 920 | 585 |
கங்கை .... |
1,860 | 920 | 485 |
மக்கன்சி .... |
2,510 | 682 | 500 |
ஆப்-இர்ட்டிஷ் (சைபீரியா) .... |
3,550 | 1,122 | 400 |
வால்கா .... |
2,300 | 563 | 300 |
நைல் .... |
4,160 | 1,120 | 56 |
கொலராடோ .... |
1,700 | 244 | 23 |
வடிநிலத்தின் தன்மையினால் ஓர் ஆறு முதன்மை பெறக்கூடும். ரைன் நதியைவிடக் காங்கோவும் ஆமேசானும் எவ்வளவோ பெரியவை. ஆனால் ரைன் பாயும் பகுதி அபிவிருத்தி அடைந்ததும் ஜனநெருக்கமுள்ளதும் ஆகும். ஆமெசானும் காங்கோவும் அடர்ந்த காடுகளின் வழியே பாய்கின்றன. ஆகையால் ரைன் மிக முக்கியமானதாக உள்ளது. பொதுவாக ஓர் ஆற்றின் முக்கியத்துவம் அதன் மூலத்திலிருந்து முகத்துவாரத்தின் பக்கமாக அதிகமாகிக் கொண்டே வரும். வீடுகளுக்கும் தொழில்களுக்கும் தேவையான நீரை ஆற்றிலிருந்து பெறுவதால் ஆற்றங்கரைகளில் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். மேலும் ஆற்றின் வழியே எளிதிலும் குறைந்த செலவிலும் கனமான பொருள்களைக் கொண்டு செல்ல முடிகிறது. நீர் கிடைப்பது அருமையான வறண்ட பிரதேசங்களில் ஆற்றங்கரைகள் இன்னும் முக்கியமானவை. இதனாலேயே நைல், யூப்ரடீஸ், டைக்ரிஸ், சிந்து ஆகிய ஆறுகளின் பள்ளத்தாக்குகளில் நிலையான உறைவிடங்களைக் கொண்ட ஆதி நாகரிகங்கள் தோன்றின. மழை குறைவான பகுதிகளுக்கு ஆறுகள் பாசன வசதி அளிக்கின்றன. ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வண்டல் படிந்த பெரிய சமவெளிகள் தோன்றுகின்றன. செழிப்பான இப்பகுதிகளில் மக்கள் திரண்டு வாழ்ந்து விவசாயத்தில் ஈடுபட முடிகிறது. ஹுவாங்-ஹோ, யாங்ட்ஸி சமவெளிகளும் சிந்து கங்கைச் சமவெளிகளும் உலகிலேயே மக்கள் தொகை மிகுந்த பகுதிகளாகும். ஒரு நதியின் முகத்துவாரத்தில் சேரும் படிவுகளைக் கடலின் ஏற்றவற்றம் அகற்றிவிட்டால் அது துறைமுகத்திற்கு நல்ல இடமாகும். லண்டன், நியூயார்க், ஷாங்காய், ராட்டர்டாம், ஹாம்பர்கு, நியூ ஆர்லியன்ஸ், கல்கத்தா, போனஸ் அயர்ஸ் போன்ற பெருநகரங்கள் பல நதி முகத்துவாரங்களில் அமைந்திருப்பது முகத்துவாரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டும். ஆறு பாயும் நிலத்தின் சரிவு அதிகமாக இருந்தாலும், அதில் நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும், அந்த இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். ஆறுகள் நாடுகளின் அரசியல் எல்லைகளாகவும் அமைகின்றன.
ஆறும் அதன் உபநதிகளும் அவற்றின் வடிநிலத்துடன் ஒருவகைச் சமநிலையில் இருக்கும். ஆகையால் காடுகளை அழித்தோ, அணைகட்டியோ, பாசன வசதிகள் செய்தோ இச்சம நிலையை மாற்றினால், ஆற்றுப் பள்ளத்தாக்கின் மற்றப் பகுதிகளும் இதனால் பாதிக்கப்பட்டு, வெள்ளமோ, வறட்சியோ தோன்றலாம். ஆற்று வடிநிலத்தைக் கூட்டாக அபிவிருத்தி செய்யத் தற்காலத்தில் பல நோக்கத் திட்டங்கள் நிறுவப்படுகின்றன. இந்தியாவின் ஆறுகளுக்கும் அவற்றின் வடிநிலத்திற்கும் உள்ள தொடர்புகளைத் தெளிவாக அறிந்தால்தான் நாம் அவற்றின் முழுப்பயனையும் அடையலாம். ஆறுகளை உயிருள்ளவைகளாகவும், புனிதமானவைகளாகவும் இந்தியர் கருதுவது இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. என். அ.
ஆறுகளின் வேலை: போதிய நீர் வசதியும் தக்க சரிவும் இருந்தால் ஆறு தோன்றிப் பாய்கிறது. தரையடி நீரும், பனிப்பாறைகள் உருகித் தோன்றும் நீரும் ஆறுகளின் தோற்றத்திற்குக் சில சமயங்களில் காரணமாக இருந்தாலும், பெரும்பான்மையான ஆறுகள் மழை நீரிலிருந்தே தோன்றுகின்றன.
தரையை அடையும் மழைநீர் ஓடைகளாக ஓடி, ஒன்று சேர்ந்து ஒரு வாய்க்கலாகப் பாய்கிறது. இதன் அளவு சரிவையும், கால்வாயின் குறுக்குவெட்டையும், வடிவையும் பொறுத்திருக்கும். இவை ஆற்றின் இயக்கத்தாலேயே மாறுகின்றன. உபநதிகளின் நீரும் தரைநீரும் வந்து சேர்வதால் ஓர் ஆற்றின் பிறப்பிடத்தைவிட அதன் முகத்துவாரத்தில் பாயும் நீர் அதிகமாக இருக்கும்.
அரிமானம் : ஆற்றின் இயக்கமும், அரித்தலும், சுரண்டலும், தேய்வும் சேர்ந்து ஆற்றின் அரிமானத்திற்குக் காரணமாகின்றன. தளர்ந்துள்ள பொருள்களை நீரோட்டத்தின் விசையானது பெயர்த்துச் சென்றுவிடுகிறது. நீர் மண்ணைக் கடைந்து கழுவிச் சென்று சிறுபொந்துகளைக் குடைகிறது ; பாறையில் உள்ள உறுதியற்ற தளங்களிலும் பிளவுகளிலும் தனது இயக்கத்தால் குழி தோண்டிவிடுகிறது. உறைபனி பாறைகளைப் பிளந்து நீரோட்டம் கற்களைக் கடத்திச் செல்ல உதவுகிறது.
பாறைகள், கூழாங்கற்கள், மணல், வண்டல் ஆகிய பொருள்கள் ஆற்றின் படுகையையும் பக்கங்களையும் தேய்த்துவிடுவது சுரண்டல் எனப்படும். மிகக் கடினமான அடிப்பாறைகளும் இவ்வினையினால் அகழப்பட்டும் மழுங்கியும் விடுகின்றன. இதனால் உருளை வடிவமான குழிகள் தோன்றுகின்றன. இவை பானைக்குழிகள் எனப்படும். இவற்றுள் பெரும்பான்மையானவை ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் சுழல்களில் உள்ள துணுக்குக்களின் சுழற்சியினால் தோன்றுபவை.
நீரோட்டத்தின் பாதையிலுள்ள பொருள்களை நீரானது கரைத்துவிடலாம். அல்லது அவற்றுடன் ரசாயன வினைகளை நிகழ்த்தலாம். சுண்ணாம்புக்கல் இவ்வாறு எளிதிற் கரையும்.
இவ்வாறு கடத்தப்படும் பொருள்கள் தாமாகவே சிதைந்து, மழமழப்பாகி உருண்டை வடிவம் பெறுகின்றன. இந்த விளைவு தேய்தல் (Attrition) எனப்படும். இவ்வினையின்போது தோன்றும் சிறு துணுக்குக்கள் இன்னும் எளிதில் கடத்திச் செல்லப்படும்.
கடத்தலும் படிதலும் : அரிக்கப்பட்ட பொருள்களும் கரைந்துள்ள பொருள்களும் நீரோட்டத்தால்