இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 17
எத்தகை யோரும், நாட்டின்
எப்பணி யேனுஞ் செய்க!
புத்துல காக்கு தற்கும்
புதுமுறை வேளாண் மைகள்
சித்திரம், சிற்பம், கல்வி
சீர்ப்பெருந் தொழில்கள் எல்லாம்
நித்தமும் செயல் நான் கென்று
நீ, பாடாய் வானம் பாடி!
திருந்திய நாட்டில் அற்றைத்
தீந்தமிழ் கற்ற வல்லார்
இருந்தமைச் சேற்று மக்கள்
இன்னலந் தேடுங் காலை
அருந்தொழில் நுணுக்கம் காட்டும்
ஆங்கில வல்லார் நின்று
பெருந்துணை செயல்ஐந் தென்று
பாடுக வானம் பாடி!
-1957