௯0
ஒப்பியன் மொழி நூல்
சொல் என்னும் சொல்லினின்றே, சோழம் என்னும் நாட்டுப்பெயர் தோன்றியுள்ளதாகத் தெரிகின்றது. லகரம் ளகரமாகவும் அதன்வாயிலாய் ழகரமாகவும் திரிதல் இயல்பே.
எ - டு : கல் - கள் - காளம் - காழகம் = கருமை. கல் + து = கஃறு. கஃறெனல் = கறுத்திருத்தல்.
“கஃறென்னும் கல்லத ரத்தம்”
(தொல். எழுத்து. 40. உரை)
சுல் — சுள் — சூள் — சூழ்.
துல் — துள் — தொள் — தொழு — தோழன்.
நுல் — நுள் — நுளை — நுழை — நூழை.
புல்—பொல்—பொள்—போழ்.
கில்—கிள்—கீள்-—ழ்.
சொல்—(சோல்)—(சோளம்)—சோழம்-சோழன்.
இடங்கள் நிலைத்திணையால் (தாவரம்) பெயர்பெறுவது மிகப் பொதுவியல்பாகும்.
கா : நாவலந்தீவு, பனைநாடு, நெல்வேலி, ஆர்க்காடு, எருக்கங்குடி, தில்லை, கடம்பவனம், குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்திணைப் பெயர்களும் நிலைத்திணையால் வந்தவையே.
சோழன் என்னும் பெயர் வடமொழியிலும், ஆரியத் தன்மையடைந்துள்ள தெலுங்கிலும் சோட(ன்) என்று திரியும்.
கா | : | தமிழ் | தெலுங்கு | வடமொழி |
தமிழம் | திரவிடம் (திராவிடம்) | |||
கிழங்கு | கெட்ட | |||
கோழி | கோடி |
சேரன்:
தமிழகத்தின் பெருமலைத்தொடரான குடமலை, சேர நாட்டிலிருப்பதால், சேரனுக்கு மலையன், மலையமான், மலைநாடன், வானவரம்பன் என்னும் பெயர்கள் உண்டு.
சாரல் என்னும் பெயர் மலையடிவாரத்தையும் மலைப் பக்கத்தையும் குறிக்கும். குறிஞ்சிநிலத்திற்கும் குறிஞ்சித்