114
லீலா : ஒன்றுமில்லை, உம்..... வெறும் காகிதம்....
பொன் : காகிதமா! ஏதோ படத்தைப் போலல்லவா..... தெரிகிறது.
லீலா : ஆமாம், அது எங்கண்ணாவுடைய படம்.
பொன் : என்ன, உன் அண்ணாவுடைய படமா? எங்கே, இப்படிக் கொடு பார்ப்போம்.
லீலா : ஊஹும்? உங்களிடத்தில் கொடுத்தால் நீங்கள் கிழித்து விடுவீர்கள்.
பொன் : அதெல்லாம் அப்படி ஒன்றுங் கிழித்துவிட மாட்டேன்; சும்மா கொடு.
லீலா : இல்லை, என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்; நான் கொடுக்கவே மாட்டேன்.
பொன் : என்ன! நான் கேட்கிறேன்; கொடுக்கவே முடியாதா ! எனக்கு எல்லாம் தெரியும். நீ உன் அண்ணனையே காதலிப்பவளென்று மரியாதையாய்க் கொடு.
லீலா : போதும் நிறுத்தும். வித்தியாசமாய் ஒன்றும் பேச வேண்டாம்.
பொன் : என்ன டீ! போனால் போகிறதென்று பார்த்தால் அளவுக்கு மீறுகிறாய். இப்பொழுது கொடுக்க முடியுமா? முடியாதா?
லீலா : முடியாது.
பொன் : முடியாது, ஊம்.சரி. கொடுக்கவேண்டாம்; அந்தக் கள்ளப் புருஷன் யாரென்றாவது சொல்.
லீலா : அதுவும் முடியாது.