எனது நாடக வாழ்க்கை/துன்பத்திலும் சிரிப்பு

விக்கிமூலம் இலிருந்து
துன்பத்திலும் சிரிப்பு

கரூரிலிருந்து புதுக்கோட்டைக்குச் சென்றோம். அப்போது மழைக்காலம். புதுக்கோட்டையில் கடுமையானமழை. வசூலே இல்லாமல் மிகுந்த சிரமப் பட்டோம். பெரியண்ணா நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொண்டு வர நாகர் கோயிலுக்குப் போயிருந்தார். புதுக்கோட்டையில் நான்கு புறங்களிலும் பெரு மழையால் உடைப்புகள் ஏற்பட்டு விட்டன. புதுக்கோட்டை ஒரு தீவுபோல ஆகிவிட்டது.

ஒரு நாள் சாவித்திரி நாடகம். வசூல் ஏழே ரூபாய்கள். ஆனாலும் நாடகத்தை நிறுத்தாமல் நடத்திைேம். மின்சார விளக்குக்காகத் தனியே பாலகிருஷ்ண சாஸ்திரி என்பவரிடம் ஒப் பந்தம் செய்திருந்தோம். அவரது இஞ்சின் மூலம் எங்களுக்கு மின்சாரம் கிடைத்து வந்தது. அந்த இஞ்சின், கொட்டகையின் பின்புறம் ஒடிக் கொண்டிருந்தது. மழையின் வேகத்தால் இஞ்சின் புதைந்திருந்த இடம் முழுவதும் வெள்ளக் காடாகி விட்டது. இஞ்சின் ஒடவில்லை. கொட்டகையில் இருள் சூழ்ந்தது. வழக்கம்போல் இரண்டு கியாஸ் லேட்டுகள் மேடையில் வைக்கப் பட்டன. சாவித்திரி நாடகம் தொடர்ந்து நடந்தது. அன்று நான் சத்தியவானக நடித்தேன். என். எஸ். கிருஷ்ணன் சுமாவியாக நடித்தார். சத்தியவானின் திருமணச் செய்தியைச் சுமாலியிடம் சொல்லியனுப்புகிறார்கள். சுமாவி ஒரு கிழவனுக மாறுவேடம் பூண்டு வந்து, சத்தியவானுக்குக் கோபத்தை மூட்டுகிறான். சத்தியவான் கோபத்தில் அவனது தாடியைப் பிடித்து இழுக்க, தாடி கையோடு வந்து விடுகிறது. உண்மை வெளியாகிறது. இந்தக் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. என். எஸ். கிருஷ்ணன் அன்று கிழவகை வேடம் பூண்டு வந்து செய்த வேடிக்கைகள்-கற்பனைகள் எனக்குத் தாங்க முடியாத சிரிப்பை யுண்டாக்கின. கோபிக்க வேண்டிய நான், சிரித்துக் கொண்டே நின்றேன். உடனே என். எஸ். கிருஷ்ணன் “நான் என்ன செய் தாலும் உனக்குக் கோபம் வராது போலிருக்கிறதே? “ என்றார், நான், “நீர் யாரென்று எனக்கு நன்றாகத்தெரியும். சத்தியவானை உம்மால் ஏய்க்க முடியாது” என்று கூறிக்கொண்டே அவர்கட்டி யிருந்த தாடியை இழுத்தேன். அவரும் நான் இப்படிச் செய்வே னென்று எதிர்பார்க்கவில்லை. விழுந்து விழுந்து சிரித்தார். சபை யில் அங்கொருவர் இங்கொருவராக அமர்ந்திருந்த பொது மக்க ளும் எங்கள் விளையாட்டைப் பார்த்துச் சிரித்தார்கள். துன்பமய மான அந்த நேரத்திலும் எங்களுக்குச் சிரிப்பூட்டி இன்பத்தைத் தந்த அந்தப் பொன்னை நாட்களை என்னல் மறக்க முடிய வில்லை.

வெள்ளத்தில் நீந்தினார்

நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொண்டுவரச் சென்ற பெரியண்ணா, பணத்தோடு திரும்பினார். புதுக்கோட் டைக்கு அவர் வரமுடியாமல் மழையில் ஏற்பட்ட உடைப்புகள் தடுத்தன. எங்கும் ஒரே வெள்ளக் காடு. காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே பாதை உடைப்பெடுத்துக் கொண்டது. காட்டாறு கரை புரண்டு ஓடியது. பெரியண்ணாவின் வருகையை ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நெருக்கடியான நிலைமை.

பணத்துடன் வந்த பெரியண்ணா வெள்ளத்தைக் கண்டார்; சிந்தித்தார். வெள்ளம் குறைந்த பின் போகலாமென்று எண்ண வும் இடமில்லை. மழை மேலும் பெய்துகொண்டே இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தார். வேட்டி, சட்டையைக் களைந்து எல்லா வற்றையும் பணத்தோடு தலையில் கட்டிக் கொண்டார். ஒடும் வெள்ளத்தில் குதித்து நீந்தத் தொடங்கினார்.அவருடைய இந்தத் துணிவைக் கண்டு, கூடி நின்ற மக்கள் எல்லோரும் வியப்படைந் தார்கள். பெரியண்ணா நன்முக நீந்தக் கூடியவர். சிறிதும் அஞ்ச வில்லை, துணிவோடு நீந்தி மறு பக்கம் வந்து சேர்ந்தார். பெரி யண்ணா வந்து, தாம் நீந்தி வர நேர்ந்த நிலைமையைப் பற்றிச் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் பயமாகஇருந்தது. கம்பெனி யின் இந்தக் கஷ்டமான நிலையிலும் நடிகர்கள் அன்போடு மனம் கலங்காது ஒத்துழைத்தார்கள்.

நகைச்சுவை நடிகர் சிவதாணு

புதுக்கோட்டையில் கம்பெனி இவ்வாறு தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், அம்மா நாகர்கோவிலுக்குப் போய்த் திரும்பியபோது சிவதானுவையும் அழைத்து வந்தார்கள். சிவதாணு எங்கள் ஒன்றுவிட்ட தமக்கை மீனாட்சியம்மையாரின் புதல்வர். பள்ளிக்கூடத்தில் மிகவும் குறும்புகள் செய்து கொண்டிருந்த சிவதாணுவை எங்கள் தமக்கையார்,தாயாரோடு அனுப்பி வைத்தார்கள். சிவதாணுன்வக் கண்டதும் எங்கள் குழுவிலிருந்த நடிகர்கள் சிரித்தார்கள். பார்ப்பதற்கு முரட்டுத் தனமாக இருந்த சிவதாணு, ஒரு நகைச்சுவை நடிகராக வரக் கூடுமென்று யாரும் எண்ணவில்லை. புதுக்கோட்டையில் அம்மாவுக்கு உடல் நலம் குன்றியது. படுக்கையிலேயே கிடந்தார்கள். இந்நிலையில் நாங்கள் காரைக் குடிக்குப் பயணமானோம். காரைக்குடி வெற்றி விநாயகர் தியேட்டரில் நாடகம் தொடங்கியது. அம்மா மட்டும் புதுக் கோட்டையிலேயே இருந்தார்கள். காரைக்குடியில் அமோகமாக வசூலாயிற்று. நாவல் நாடகங்களுக்கு நல்ல பேர். புதுக்கோட்டையில் திண்டாடிக் கொண்டிருந்த கம்பெனிக்குக் காரைக்குடி வசூல் வியப்பை அளித்தது.

சீனிவாசபிள்8ள கம்பெனி

அப்போது காரைக்குடி ஷண்முக விலாஸ் தியேட்டரில், பிர சித்தி பெற்ற சீனிவாசபிள்ளை கம்பெனியார் நடித்து வந்தார்கள். ஏராளமான காட்சியமைப்புக்களும், கண் கவரும் உடைகளும் வைத்திருந்த பெரிய கம்பெனி அது. அவர்கள் இராமாயணம், மகாபாரதம், மயில் இராவணன், புல்புலையான், அலியாதுஷா முதலிய நாடகங்களையெல்லாம் நடித்தார்கள். புல்புலையான் நாடகத்தில் மேடையிலேயே இரயில் ஒடுவதுபோல் காண்பிப்பார்கள். அவ் வளவு பெரிய கம்பெனிக்கு ஐம்பது, நூறுதான் வசூலாகியது. அதே நேரத்தில் பழைய ஓட்டை உடைசல் சாமான்களை வைத்துக் கொண்டு நாடகங்களை நடித்த எங்களுக்கு ஆயிரம் ரூபாய்கள் வரை வசூலாயிற்று. எங்களுடைய சிறுவர் கம்பெனி, பெரியவர்கள் கம்பெனிக்குப் போட்டியாக நின்று சமாளித்து, வெற்றியும் அடைந்தது. சீனிவாசபிள்ளை கம்பெனியார் வேறு ஊருக்கு மாற்றிக் கொண்டு போய் விட்டார்கள். எங்கள் நடிகர்களுக்கு ஒரே குதூகலம். திடீரென்று ஒருநாள் அம்மா அபாயகரமான நிலையிலிருப்பதாகத் தகவல் வந்தது. நாடகம் முடிந்ததும் நண்பர் ஒருவர் உதவிய காரில் நாங்கள் நால்வரும் இரவோடிரவாகப் புதுக்கோட்டைக்கு வந்தோம்… அந்தக் கண்டத்திலிருந்து அம்மா ஒருவாறு தப்பிப் பிழைத்தார்கள்.

குடந்தையில் காலரா காரைக்குடி நாடகம் முடிந்த பின் திருவாரூரில் ஒரு மாத காலம் நடித்து விட்டுக் கும்பகோணம் வந்தோம். வாணி விலாஸ் தியேட்டரில் நாடகங்கள் நடைபெற்று வந்தன. கும்பகோணத்தில் அப்போது காலரா நோய் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்நோய் முதன்முதலாக என்னையும், என். எஸ். பாலகிருஷ்ணனையும் பீடித்தது. எங்கள் இருவருக்கும் அம்மாவே பல மருந்துகள் கொடுத்தார்கள்.

நோயோடு போராடிக் கொண்டே நாங்கள் இருவரும் தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அம்மாவில் மருந்து எங்கள் நோயைக் குணப்படுத்தியது. நாடகத்திற்கு வசூல் மிக மோசமாக இருந்தது. இந்நிலையில் கம்பெனியில் முக்கிய வேடம் தாங்கி வந்த சுப்பையா என்னும் சிறுவனுக்குக் காலரா நோய் கண்டது. சுப்பையா நல்ல நடிகன்; பாடங்களை விரைவாக நெட்டுருப் போடும் ஆற்றல் வாய்ந்தவன். ஒரு சமயம் மேனகா நாடகத்தில் மேனகா பாடத்தை ஒரே நாளில் பாடம் செய்து நடித்தவன். அவன் மீது எல்லோரும் அபிமானம் வைத்திருந்தோம். அவன் திடீரென்று நோய் கண்ட இரண்டாம் நாளே இறந்து விட்டான். இந்த எதிர்பாராத அதிர்ச்சியால் நாடகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சின்னண்ணா டி.கே.முத்துசாமிக்குக் காலரா நோய் கண்டது. ஏற்கனவே மனநோய் பிடிந்திருந்த நிலையில், அம்மாவினால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடிய வில்லை . அவர்கள் என்னென்னவோ மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தார்கள். எதுவும் பயனளிக்கவில்லை.

டாக்டர் சாம்பசிவய்யர்

அப்போது கும்பகோணத்தில் டாக்டர் சாம்பசிவய்யர் பிரசித்தி பெற்ற டாக்டராக இருந்தார். அவரிடம் சின்னண்ணாவைக் கொண்டு போய் வந்தோம். அவரும் ஏதோ மருந்து கொடுத்தார்; ஊசி போட்டார்; வீட்டுக்கும் வந்து பார்த்தார். “பிழைப்பது கடினம். ஏதோமுயல்கிறேன்.இறைவன் திருவருள்’ என்று சொல்லிப் போய்விட்டார். இந்தச் செய்தி அறிந்ததும், அம்மாவுக்கு ஆறுதல் கூற முடியவில்லை. சின்னண்ணா முன்னிலையில் அழக்கூடாதென்று சொல்லி அம்மாவை ஒருவாறு சாந்தப் படுத்தினோம். மூத்தப்பிள்ளையோ முகங்கொடுத்துப் பேசுவதில்லை. இரண்டாவது பிள்ளை பிழைப்பது கடினம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். இதை ஒரு தாயுள்ளம் எப்படி தாங்க முடியும்?

அம்மா மனத் துயரங்களையெல்லாம் அடக்கிக் கொண்டு அண்ணாவைக் கவனித்தார்கள். இடைவிடாது அவர் அருகிலேயே இருந்து வேண்டியது செய்தார்கள். மூன்றாம் நாள் காலை அம்மா வுக்குக் காலரா நோய் வந்துவிட்டது. டாக்டர் வந்து பார்த்தார். ஏற்கெனவே மிகவும் பலஹlனமான உடல்.பிழைப்பது கஷ்டம்’ என்று சொல்லி விட்டார். நான் பெருந் துயரத்திலாழ்ந்தேன். அறைக்குள் படுத்திருந்த சின்னண்ணாவை வெளியே கூடத்தில் படுக்க வைத்துவிட்டு, அம்மாவை அறைக்குள் படுக்கவைத்தேன்.