உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆதிசைவர்

விக்கிமூலம் இலிருந்து

ஆதிசைவர் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களிலும் தோன்றிய கௌசிகர், காசிபர், பாரத்துவாசர், கௌதமர், அகத்தியர் ஆகியவர்களின் மரபினரென்றும், இவர்கள் அனாதிசைவர், ஆதிசைவர், மகாசைவர், அனுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்நியாசைவர் என்று பிரிக்கப்படுவர் என்றும் கூறுவர். இவர்களே சிவாலயங்களிற் பூசை செய்வதற்கு அதிகாரிகளாகிய அந்தணர்கள். சைவ வேடங்களாகிய விபூதி உருத்திராக்கங்களில் நம்பிக்கையும் அதற்கேற்ற ஒழுக்கமும் உடையவர்கள்; சைவ வேளாளராகிய சைவாசாரியர்களும் ஆதிசைவரெனப்படுவர்.