திருத்தொண்டத்தொகை

விக்கிமூலம் இலிருந்து

சுந்தரர் பாடியது[தொகு]

ஏழாந்திருமுறை[தொகு]

பண்: கொல்லிக்கௌவாணம்[தொகு]

(அடிமை)
திருச்சிற்றம்பலம்

பாடல்:01 (தில்லைவாழ்)[தொகு]

தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன், திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே யென்னாத வியற்பகைக்கு மடியேன், இளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன்,
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்,விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தா ரமர்நீதிக் கடியேன், ஆரூர னாரூரி லம்மானுக் காளே. (01)
"https://ta.wikisource.org/w/index.php?title=திருத்தொண்டத்தொகை&oldid=1439579" இலிருந்து மீள்விக்கப்பட்டது