திருப்புகழ்
அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ்
முருகன் துதி [தொகு]
ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே
- ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
- குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
- வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
- ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.
விநாயகர் துதி [தொகு]
கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி
- கப் பியகரிமுகன் - அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
- கற்பகம் எனவினை - கடிதேகும்;
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
- மற்பொருதிரள் புய - மதயானை
மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை
- மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
- முற்பட எழுதிய - முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
- அச்சது பொடிசெய்த - அதிதீரா;
அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
- அப்புன மதனிடை - இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
- அக்கண மணமருள் - பெருமாளே! 1
உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
- ஒண்கடலிற் றேன முதத் துணர்வூறி;
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
- என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே;
தம்பிதனக் காசுவனத் தணைவோனே;
- தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
- ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. 2
பக்கரைவி சித்ரமணி பொற் கலணை யிட்ட நடை
- பட்சிபெனு முக்ரதுர கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
- பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்;
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
- சிற்றடியு முற்றியப னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
- செப்பென எனக்கருள்கை மறவேனே;
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புனெய்
- எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
- ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்;
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெனக்கொளொரு
- விக்கநச மர்த்தனெனும் அருளாழி!
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
- வித்தகம ருப்புடைய பெருமாளே! 3
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
- விசையன் விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
- வினையின்விளை வேதும் அறியாதே;
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
- கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
- கழலிணைகள் சேர அருள்வாயே;
இடையர்சிறு பாலை திருடிகொடி போக
- இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயமிக வாடியுடையபிளை நாத
- கணபதியெ னாம முறைகூற;
அடையலவர் ஆவி வெருவ அடி கூர
- அசலுமறி யாமல் அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
- அறிவருளும் ஆனை முகவோனே! 4
நினது திருவடி சத்திம யிற்கொடி
- நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
- நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன்.
நெடிய விளைமுறி இக்கொடு லட்டுகம்
- நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
- நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் இளநீரும்;
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
- மகர சலநிதி வைத்தது திக்கர
- வளரு கரிமுக ஒற்றமை ருப்பனை வலமாக.
மருவு மலர்பனை தொத்திர சொற்கொடு
- வளர்கை குழைபிடி தொப்பண் குட்டொடு
- வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே;
தென்ன தெனதென தெத்தென னப்பல
- சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
- திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை.
செரும உதரநிரப்பசெ ருக்குடல்
- நிரைய அரவநி றைந்தக ளத்திடை
- திமித திமிதிமி மத்தளி டக்கைகள் செகசேசே.
எனவெ துகுதுகு துத்தென வொத்துகள்
- துடிக ளிடிமிக வொத்துமு ழக்கிட
- டிமுடி டிமுடிமு டிட்டிமெ னத்தவில் எழுமோசை.
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
- இரண பயிரவி சுற்றுந டித்திட
- எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமானே. 5
முத்தைத்தருரு பத்தித் திருநகை
- அத்திக்கிறை சத்திச் சரவண!
- முத்திக்கொரு வித்துக் குருபர! எனவோதும்
- முக்கட்பர மற்குச் சுருதியின்
- முற்பட்டது கற்பித் திருவரும்
- முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணை தொடு
-
- ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
- பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
- பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்!
- பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே?
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
-
- நிர்த்தப்பதம் வைத்துப் பயரவி
- திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்
- திக்குப்பரி அட்டப் பயிரவர்
- தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
- சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப் பறை கொட்டக் களமிசை
-
- குக்குக்குகு குக்குக் குகுகுகு
- குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
- கொட்புற்றெழ நட்பற் றவுணரை
- வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
- குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே. 1
திருப்பரங்குன்றம் [தொகு]
முதலாவது படை வீடு
கனகந்திரள் கின்றபெ ருங்கரி
-
- தனில்வந்துத கன்தகன் என்றிடு
- கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு கதியோனே!
- கடமிஞ்சி அநந்தவி தம்புணர்
- கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
- கரியின் றுணை என்று பிறந்திடு முருகோனே!
பனகந்துயில் கின்ற திறம்புனை
-
- கடல்முன்புக டைந்தப ரம்பரர்
- படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே!
- பல துன்பம்உ ழன்றுக லங்கிய
- சிறியன்புலை யன்கொலை யன்புரி
- பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே;
அனகன்பெயர் நின்றரு ளுந்திரி
-
- புரமுந்திரி வென்றிட இன்புடன்
- அழலுந்தந குந்திறல் கொண்டவர் புதல்வோனே!
- அடல்வந்துமு ழங்கியி டும்பறை
- டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
- அதிர்கின்றிட அண்ட நெரிந்திட வருசூரர்
மன முந்தழல் சென்றிட அன்றவர்
-
- உடலுங்குட லுங்கிழி கொண்டிட
- மயில்வென்றனில் வந்தரு ளுங்கள் பெரியோனே!
- மதியுங்கதி ருந்தட வும்படி
- உயர்கின்றவ னங்கள் பொருந்திய
- வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே! 2
சருவும்படி வந்தனன் இங்கித
-
- மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
- தழல்கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி
- சயிலங்கொளு மன்றல் பொருந்திய
- பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
- தடவஞ் சுனை துன்றியெ ழுந்திட திறமாவே
இரவும் பகல் அந்தியு நின்றிடு
-
- குயில்வந்திசை தெந்தன என்றிட
- இருகண்கள் துயின்றிட லின்றியும் அயர்வாகி
- இவணெஞ்சுப தன்பதன் என்றிட
- மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
- இனியுன்றன் மலரந்தில கும்பதம் அடைவேனோ;
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
-
- மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
- திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர்பின்
- திரிகின்றவன் மஞ்சுநிறம்புனை
- பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
- செயதுங்கமு குந்தன் மகிழ்ந்தருள் மருகோனே;
மருவுங்கடல் துந்துமி யுங்குட
-
- முழவங்கள்கு மின்குமின் என்றிட
- வளமொன்றிய செந்திலில் வந்தருள் முருகோனே!
- மதியுங்கதி ரும்பிய லுந்தின
- மறுகும்படி அண்டம் இலங்கிட
- வளர்கின்றப ரங்கிரி வந்தருள் பெருமாளே. 3