பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலிங்க சாஸனம் : 2.

125


2. ' அந்தமனிதர்' பால் அதிகாரிகளுடைய கடமைகள்

தேவர் பிரியன் இவ்விதம் சொல்லுகிறான் : ஸமாபா நகரத்திலுள்ள மகாமாத்திரருக்குப் பின்வரும் அரசனுடைய நிருப வசனங்களைக் கூறுவோம். எனது நோக்கம் எதுவாயினும் அதை மனமார ஒப்புக்கொண்டு அதன்படி உடனே அனுஷ்டிக்க வேண்டுமென்பது என் விருப்பம். உங்களுக்கு அனுப்பப்படும் கட்டளைகளே அதற்கு முக்கியமான வழி. எல்லா மனிதரும் எனது மக்கள் ; என் குழந்தை குட்டிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித நன்மைகளும் சுகமும் உண்டாகவேண்டுமென்று நான் பிரார்த்திப்பது போலவே எல்லா மனிதருக்கும் அவ்விதம் விரும்புகிறேன்.'

அடக்கப்படாத 'அந்தமனிதர். (எல்லைப் பிரதேசங்களில் வசித்துவரும் ஜாதியார்) விஷய மாய் அரசன் கட்டளை என்ன? அரசன் விருப்பம் இதுவே. எல்லைஜனங்களுக்கு என்னைப்பற்றிக் கொஞ்சமும் அச்சம் வேண்டாம்; அவர்கள் என்னை நம்ப வேண்டும்; நிச்சய மாய் அவர்களுக்கு என்னால் வியசன முண்டாகாது, சுகமே உண்டாகும். மேலும் அரசன் எதையும் கூடுமானவரையில் பொறுத்துக் கொள்ளும் சுபாவமுடையவன். என்பொருட்டாவது அவர்கள் தர்மத்தைப் பின்பற்றி இம்மையும் மறுமையும் அடைய வேண்டும்.