பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சே: சுசீலா, பவானியின் மகள் ! மாசற்றவள். முழு விவரம் இவன் சொல்வான். ரத்னம் யார் தெரியுமா? சொர்ணத்தின் மகன்! உங்கள் குமாரன். [தேவர் ரத்னம் ஆலிங்கனம்.] காட்சி 49 இடம் :- சுசீலா வீட்டு மாடி அறை. இருப்போர் :- சுசீலா. (பிறகு) சேகர். சேகர் உள்ளே [சுசீலா விம்மிக்கொண்டிருக்கிறாள். நுழைந்து.) சே : கண்ணே ! சுசீலா? அழாதே. நமது கஷ்டம் தீர்ந்து விட்டது. நமது காதலை இனி யாரும் தடுக்கமுடியாது. (அவளை அணைத்துக்கொண்டு) இனி நாம் சாகவேண்டியதில்லை. [விஷ சீசாவை எடுத்துக் கீழே போட்டு உடைத்து). ஜெகவீரன் கட்டிய துதுக்கோட்டை தூளாயிற்று சுசீலா! உன் தந்தையை மிரட்ட அவன் வைத்திருந்த பயங்கர இரகசியம் ஒழிந்தது.இனி ஜெமீன்தாரன் நாம் சொல்கிறபடி ஆடுவான். சு: என்ன? என்ன? ஆபத்து இல்லையா? வாழ்வு இருக் கிறதா? எனக்கா? சே: நாளைக்கு நமக்கு நிச்சயமாகிறது திருமணம். சு: அன்பே! ஆருயிரே? என்மீது கொண்ட சந்தேகம்? சே: சந்தேகம், சஞ்சலம், சங்கடம், சதி, சோகம் யாவும் பஞ்சு பஞ்சாகப் பறந்தே போய்விட்டது. உத்தம நண்பன் ரத்தினம், உன் தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அவன் உபகாரம் செய்ததாலேதான், ஜெமீன்தாரனை அடக்க முடிந்தது. சு: கண்ணாளா! நான் கனவு காணவில்லையே! சே: (அவள் கன்னத்தைக் கிள்ளி) இது கனவா? (அவள் கரங்களை முத்தமிட்டு) இதுவும் கனவா? (ஆனந்தத்தால் கண்களை மூடிக்கொண்டு) இல்லை! வாழ்வு! இன்பம்: இன்ப வாழ்வு இது! ஒரு இரவு-ஒப்பற்ற இரவு சுசீலா! இந்த இரவு இன்பத்தோடு தொடங்கிற்று, இடையிலே நமது வாழ்வையே

102

102