பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடம் :- சாவடி. காட்சி. 6 இருப்போர்: ஊர்வம்பர்கள். [பலர், நிலா வெளிச்சத்திலே தமாஷாகப் பாடு கிறார்கள்; இரண்டு கட்சியாகப் பிரிந்து கொண்டு, சைவ வைணவத்தைப் பற்றிய தர்க்கப் பாட்டை] அரிநாராயண கோவிந்தா என்றுசொல்லி நாமம் போட்டுக் கோணும் திருநாமம் போட்டுக் கோணும் (பாட்டு முடிந்த பிறகு] பழனி: அப்பேன் ! சைவம் பெரிசா வைஷ்ணவம் பெரிசா என்பது பற்றி, முன்னாலே ஒரு நாள் எனக்கும் எம்பெருமாள் பிள்ளைக்கும் தர்க்கம் நடந்தது தெரியுமா? வெங்கடேசன் : தர்க்கம் நடந்துதா? என்னா வந்திங்க? முடிவுக்கு பழனி: என்னா முடிவா? முடிவிலே, அவன் ஆஸ்பத்திரிக் குப் போனான் கட்டு கட்டிக்கொள்ள; நானு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போனேன், கேஸ் கட்டைத் தூக்கிக்கிட்டு. [அடேடே! அதுபோல இப்பவேண்டாம்' என்று பலரும் கூற, கும்பல் கலைந்துபோகிறது.) இடம்:- பாதை காட்சி 7 இருப்போர்: கள்ளன், கான்ஸ்டேபிள்கள். [ஒரு கள்ளனைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகிறான் ஒரு கான்ஸ்டேபிள். எதிரே வரும் நண்பன் கான்ஸ்டேபிளைப் பார்க்கிறான்.] ந : ஏன் சார் ! எங்கே திருடினான்?

8

8