பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

காட்சி 3 இடம்:- மற்றோர் மாளிகை. இருப்போர்:-தாய், சிறுமி. [தாய், சற்று சோகமாகக் காணப்படுகிறாள். சிறுமி அவளிடம் வந்து, கைபிடித்து இழுத்து......] சிறுமி: அம்மா! மாடிக்குப் போகலாம் வாம்மா. மாமாவைப் பார்க்கலாம், வா ! சந்த தாய்: கோதி ! தொல்லை கொடுக்காதே. எனக்கு உடம்பு சரியில்லை. சிறுமி : போம்மா. புளுகு. நேத்து நீயே சொன்னயே, மாடியிலே போயி நிலாவைப் பார்த்துகிட்டே இருந்தா ரொம்பச் இருக்கும்னு. சந்தோஷமா அப்பாகூட இன்னக்கி மட்டும் நிலா அழகா இல்லையா? சிரிச்சாங்களே. கண் தாய்: (குழந்தையை மார்புறத் தழுவிக்கொண்டு) கண்ணல்லவா! எனக்கு 'இன்று நிலவு பிடிக்கலே, நீ மட்டும் வேண்டுமானா போய் மாடியிலே விளையாடு கண்ணு. சிறுமி: மாட்டேன் போ. நான் கூப்பிட்டா வருவாயா? அப்பா கூப்பிட்டா வருவே. வரட்டும் வரட்டும், அப்பா கிட்டச் சொல்றேன். தாய்: அப்பா! நல்ல அப்பா! நிலா எவ்வளவு அழகாக இருந்தா அவருக்கு என்ன? அந்தந்தக் குடும்பத்திலே, ஆனந்தமாக இருக்கிறாங்க. அவருக்கு ஏதடி கண்ணே அதிலே நினைப்பு. அவர் இன்னேரம் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ! சிறுமி : எங்கேம்மா போனாரு அப்பா. ஏம்மா இன்னம் வரலே.

தாய்: (பெருமூச்சுடன்) அவரா? அவருக்குத்தான் அந்தப் பாவி ராஜு, சொக்குப்பொடி போட்டுவிட்டானே. அலைகிறார் அவன்கூடச் சேர்ந்துகொண்டு.

3