பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெ: (கோபமாக) பவானியைக் கொன்றுவிட்டாய். கொலை செய்திருக்கிறாய். தே: ஆ! ஐய்யோ! கோலம்! கொலை! இதென்ன பவானி ! பவானி ! பிணம்! என் மனைவி 1 நான் கொன்றேன். ஜெகவீரா! ஏன் பவானியை இங்கே அழைத்து வந்தாய்? சொந்த தங்கையை, வேறோர் சீமானிடம் சரசமாட... ஆஹா! சகிக்க முடியவில்லையே!! ஜெ: முட்டாள்! என் கடனைத் தீர்த்துக்கொள்ள சிறு கபட நாடகமாடினேன். பவானியை, விலாசனி என்ற மாறு பெயருடன் இங்கே அழைத்து வந்தேன், பாட்டுக் கச்சேரிக்காக, நீ, படு கொலை,செய்துவிட்டாய். இதோ (காமிராவைக் காட்டி) படம் பிடித்திருக்கிறேன் பார்! உன்னை என்ன பாடு படுத்துகிறேன். தே: படுபாவி ! மோசக்காரா! ஜெ: வாயை மூட்டா கொலைகாரா! [தேவர் மயக்கமடைகிறார்.) காட்சி 34 இடம்:- தேவர் வீடு. இருப்போர்:--தேவர், சேகர். [தேவர், பழைய நாள் படுகொலை பற்றிய தகவலைக் கூறி முடிக்கிறார்.] தே: சேகர்! அத்தகைய கொலைகாரன் நான். பவானியைக் கொன்ற பாதகன். என் மகள் சுசிலாவுக்கு அப்போது பத்து வயது. பள்ளிக்கூடத்தில் இருந்தாள். தாயார் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவளுக்குக் கூறப்பட்டது. இன்று வரையில் என் மகள்,பவானி மாரடைப்பால் இறந்ததாகவே நம்புகிறாள். உலகமும். அப்படியே நம்புகிறது. [தேவர் கண்களில் நீர் தளும்புகிறது.) அண்ணன் பட்ட கடனைப் போக்க, அவன் கூறிய ஈனத்தன மான யோசனையைக் கேட்டு, வியாபாரியை ஏமாற்ற விலாசனி என்ற வேஷம் போட்டுக் கொண்டுபோய், அக்ரமக்கார.

69

69