இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
123
கோவையிலும் சிதம்பரனார் பூங்கா தன்னில்
குவிந்தனரே மக்களொரு வெள்ள மாக;
யாவையிலும் சிறப்புமிக்க அம்மா நாட்டில்
எதிர் வந்த தேர்தல்வேட் பாளர் சொன்னார்!
"தேவையுறும் எதிர்க்கட்சி திடமாய் வேண்டும்;
திட்டுதற்கே பிரிந்துசென்றோர் திருந்த வேண்டும்;
சேவையினால் நாம்சிறப்போம்!" என்றார் அண்ணா;
சீர்எண்ணி இராசாசி ஆத ரித்தார்!
அறுபத்தி ரண்டினிலே வந்த தேர்தல்
அளவற்ற மாறுதலைச் செய்த திங்கே!
உறுபதினய்ந் தில் மீண்டும் ஒருவர் கூட
உள்ளேசெல் லாவண்ணம் எதிர்ப்புத் தந்தார்.
செருமுனைவாழ் கலைஞரைத்தான் வெல்ல வில்லை; :சினத்துடனே மற்றவரைத் தோற்கடித்தும்
மருவிலாதார் அய்ம்பதுபேர் சட்டமன்றில்
மாண்புடனே எதிர்க்கட்சியாகிச் சென்றார்.