இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
140
பக்தவத்ச லம்புரிந்த கொடுமை கட்குப்
"பழிவாங்கித் தோற்கடிக்கத், தேர்தல் வெல்லப்
பத்துலட்சம் நிதிதிரட்ட, வழக்கம் போலப்
பயன்படும்நம் பொருளாளர் கலைஞ ரைத் தான்
சுத்தமாக இறக்கிவிட்டார் அண்ணா! தாமும்
சுற்றுலாவால் சிங்கப்பூர், மலாயா, சப்பான்,
மொத்தமுள்ள தமிழரெல்லாம் மகிழு மாறு
முரசொலித்தார்; உலகமகாத் தலைவரானார்!
விருகம்பாக் கத்தில்மா நிலமா நாடு;
வெற்றிமுகம் அங்கேயே தோன்றக் கண்டோம்!
பெருகிவரும் ஆதரவில் காய்தே மில்லத்...
பெரியவராம் இராசாசி-சிலம்புச் செல்வர்
அருகிவிட்ட காமராசர் கட்சி நோக்கி
அறைகூவல் விடுத்திட்டார்! அண்ணா பேச்சால்
உருகிவிட்டார் தமிழகத்தார்! பந்த லுக்குள்
ஊசிகுத்த இடமில்லை; உலகம் அங்கே!