இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31
நஞ்சனை யாரிவர் வஞ்சனையாக நாம்
தஞ்சமடைந் ததாய் எண்ணிவிட்டார்-இனி
அஞ்சி அடங்கலும் கெஞ்சிக் குழைதலும்
கொஞ்சமும் நம்மவர்க் கேற்றதில்லை-உடன்
துஞ்சுதல் விட்டினி விஞ்சி எழுந்திடின்
பஞ்சில் நெருப்பெனத் தீய்ந்திடுவார்-துளிக்
கஞ்சியில் லாதவர் நெஞ்சில் இடம்பெறும்
வஞ்சினங் கூறிவந் தாரொருவர்.