பக்கம்:அண்ணா காவியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நகரம்
31

நஞ்சனை யாரிவர் வஞ்சனையாக நாம்

தஞ்சமடைந் ததாய் எண்ணிவிட்டார்-இனி

அஞ்சி அடங்கலும் கெஞ்சிக் குழைதலும்

கொஞ்சமும் நம்மவர்க் கேற்றதில்லை-உடன்

துஞ்சுதல் விட்டினி விஞ்சி எழுந்திடின்

பஞ்சில் நெருப்பெனத் தீய்ந்திடுவார்-துளிக்

கஞ்சியில் லாதவர் நெஞ்சில் இடம்பெறும்

வஞ்சினங் கூறிவந் தாரொருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/33&oldid=1078581" இலிருந்து மீள்விக்கப்பட்டது