இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52
நாதனுடன் பாலசுப்ர மண்யம் போன்ற
நல்லஎழுத் தாளரெல்லாம் அண்ணா வுக்கே
ஆதரவு மிகநல்கி, நீதிக் கட்சி
அளித்துவந்த கொள்கைகளை விளக்கிப் பேசி
வாதமுடன் ஏடுகளில் எழுதும் ஆற்றல்
வளர்த்திடவே முனைந்திட்டார்; வெற்றி கண்டார்!
சாதனைகள் எடுத்தியம்ப அண்ணா வைப்போல்
சாதனமும் பிறிதொன்று பெறுதல் ஆமோ?
செட்டிநாட்டின் இளவரசர், பன்னீர்ச் செல்வம்,
சீர்பெற்ற இரட்டையருள் இராம சாமி,
கட்டிவந்து காப்பாற்றும் அரச ரான
கண்ணியத்துப் பொப்பிலியும் கண் போல் ஏந்தி
அட்டியின்றி அண்ணாவை ஏற்றுக் கொண்டார்!
அய்யாவின் சுயமரியா தையி யக்கம்
கெட்டியாக வேர் பிடிக்கா நேரம்; அன்று
கிடுகிடெனப் பற்றிவிட்டார் அதனை அண்ணா!