இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
65
மகாத்மா இந்த பதிலைக் கேட்டதும் என்ன கூறினார் தெரியுமா? "ஆம். அப்படியும் நடக்கக் கூடும். ஆன்மீக நோக்கோடு மேற்கொள்ளும் உண்ணாவிரதத்தின் முடிவைக் கொண்டு அதன் பலத்தை முடிவுகட்ட இயலாது.
"தெய்வ அருளுக்குப் பரிபூரணமாகப் பணிவதைப் பொறுத்தே உண்ணாநோன்பின் வலிமையைக் கணக்கிட முடியும். தெய்வத்திடம் அவ்வாறு உண்மையாகப் புகலடைவதே உண்ணா நோன்பின் ஒரு பகுதியாகும். மிகச் சிறந்த கடமையைச் செய்யும் போது, இறப்பு ஏற்பட்டாலும் அதை இன்முகத்தோடு ஏற்றே ஆகவேண்டும், என்றார் காந்தியடிகள்.
காந்தி பெருமான், குறிப்பிட்ட நாளன்று தனது உண்ணா நோன்பைத் துவக்கினார். இதைக் கேட்ட ராஜ் கோட் சமஸ்தான நிர்வாகத்தினர் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் அன்னை கஸ்தூரி பாயை சிறையிலே இருந்து அவசரம் அவசரமாக விடுதலை செய்து விட்டார்கள்!