பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


யனுப்பு பாவனைக்கு--அப்சல்கானிடம் நேரடியாக பணியத் தீர்மானித்திருப்பதாக செய்தி அனுப்பு--தனியாக அப்சல்கான் இங்கே விஜயம் செய்யட்டும், நான் அவரிடம் சரண் புகுந்து விடுகிறேன்--சமர் வேண்டாம் என்று அப்சல்கானிடம் தூது அனுப்பு என்று யோசனை கூறினார் பண்டிட் கோபிநாத்--பண்டிட்?--இல்லை...பாதகன்!

"அப்சல்கான் வருவானா?"

"அனுப்பி வைக்கிறேன், அதாவது, அவன் இங்கே தனியாக வரும்படி நான் செய்கிறேன்"

"வந்த பிறகு......?"

"வந்த பிறகு! மராட்டியத்தை உன் மண்டலத்தை உன் எதிர்காலத்தைக் கருக்கக்கூடிய எதிரி, துணையின்றி தனியாக வருகிறான் என்னைச் சந்திக்க! வந்த பிறகு...என்று என்னைக் கேட்கியோ, வகை கெட்ட..."

"அறிந்தேன் ஆரிய! ஆனால், அப்சல் ஆயுதபாணியாகத்தானே வருவான்?"

"பைத்தியக்கார! அப்சல்கான், அஞ்சி அடிபணியக் காத்துக் கொண்டிருக்கும் சிவாஜிக்குத் தஞ்சமளிக்கவன்றோ இங்கே வருவான்-- நிராயுதபாணியாகவே வருவான்--அவ்விதம் ஏற்பாடு நடக்கும்."

"பண்டிட்ஜி! தங்கள் பாதாரவிந்தம்"

கோபிநாத் பண்டிட்டின் சதியாலோசனையே சிவாஜியைத் தனியாகக் காண, அப்சல்கான் வருவது