பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறிது நேரத்தில், ஒருவன் சுளுந்தக்கழி கொளுத்தியபடி இடிக்கப்பட்டிருக்கும் தடைச் சுவரைப் பார்க்கிறான். ஏரியின் மறுமுனையில் தோன்றும் ஊரை நோக்கி விரைந்து செல்லுகிறான்! உடனே சுளுத்தக்கழி கொளுத்திப் பிடித்தவனும் ஊர்ப் பெரியவர்களும் தடைச் சுவரை ஆராய்கிறார்கள். அவர்கள் கண்ணில் தீப்பொறி பறக்கிறது. அவர்கள் தம் எதிரில் தோன்றும் இரண்டுமாடிகள் உள்ள ஊரை நோக்குகிறார்கள். அவர்கள் தலைகள் சூள்கொண்டு அசைகின்றன. சினத்தோடு செல்கின்றார்கள்.

மீண்டும் குறவர்களுடன் மண்ணாங்கட்டி செல்கிறான். ஏரிக்கரை இடிபடுகின்றது. தண்ணீர், உடைந்த தடைச்சுவரைத் தாண்டி அவ்வூரில் நுழைகிறது. இடையில் பரந்த வயல் அனைத்தும் வெள்ளம். அவ்வூரிற் சென்ற அளவு இவ்வூரிலும் வெள்ளம் புகுகின்றது. மண்ணாங்கட்டி குறவர்களுடன் செல்லுகிறான்!

19