100 அம்பிகாபதி காதல் காப்பியம்
பாடங் கேட்டபின் பள்ளியின் வீட்டிற்கு
ஓடும் இளைஞரின் உவப்பொலி கேட்டனர்;
பானினைந் தூட்டும் பண்புறு தாய்போல்}}
45 ஆணினம் கன்றினை அகத்துள் நினைந்து
கானெனப் பாலினைக் கான்று கொண்டே
மந்தையி னின்றும் மனையை நோக்கிப்
பந்தி பந்தியாய் வருவதைப் பார்த்தனர்;
கம்பரும் கண்ணரும் காய்ந்து கருகி}}
50 வெம்பி விடுவர் வெய்யிலில் என்று
மப்பு பரவி மந்தாரம் போட்டதால்
தப்பி வெயிலின் தண்ணென நடந்தனர்;
ஊரின் பாங்கர் உள்ளதோர் பொதும்பரில்
நீரின் கரையில் நின்றனர் இருவரும்;
55 ஓடும் ஒடைநீர் ஒலிக்க முழவென,
பாடுபுள் பூவை பரப்ப இசையின,
ஆடும் மயிலின் ஆட்டம் சுவைத்தனர்.
கம்பர் நண்பரை நோக்கிக் கழறுவார்; இஃது,
அன்னமோ மஞ்ஞையோ ஆடுவதாக
60 முன்னைப் புலவோர் மொழிந்துள செய்தியே.
ஏத்தும் மணிமேகலை என்னும் நூலில்
கூத்தாட் டொன்று கூறப்பட் டுளதால் :
"குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
65 மயிலா டரங்கின் மந்தி காண்பனகண்'
என்று சாத்தனர் இனிக்க எழுதினர்.42. பள்ளியின் - பள்ளிக்கூடத்திலிருந்து. 44. பானினைந்து - பால் நினைத்து. 45- ஆவினம் - பசுஇனம் ஆண்டி 46. கான் . நீர்வருங் குழாய்; கான்று - சொந்து. 47. மந்கை - மந்தைவெளி 48. பந்தி பந்தியாய் - வரிசை வரிசையாய். 52 வெயிலின் - வெய்யிலிலிருந்து; தண்ணென - குளிர்ச்சியாக, 55. முழவு - மத்தளம். 56. பூவை - பாடும் பறவை. 58. கழறுவார் - சொல்லுவார். 59. மஞ்ஞை-மியில். 61. ஏத்தும் - போற்றும். 3ே. கூத்தாட்டு - நடனம். 63. தும்பி - வண்டு. 65. அரங்கு - கலை நிகழிடம்.