பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

586 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மணிமேகலை

தெய்வந்தொழா அள் கொழுநற்றொழுமவள்
பெய்யெனப் பெய்யும் பொருமழையென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரைதேறாய்

என்று புத்ததன்மத்தைத் தழுவியே ஆபிரகாமின் மனைவியாகிய சாராளென்பவள் தன் கணவன் ஆபிரகாமையே கடவுளாக சிந்தித்து நற்கிரியைகளில் நிலைத்து சகல சீவிகளுக்கும் தாயாக விளங்கி சகலராலும் கொண்டாடப்பெற்றாள்.

(சில வரிகளும் அருங் கலைச்செப்பு - விவேகமிகுதி பத்து பாடலும் தெளிவில்லை)

- 2:40; மார்ச் 17, 1909 -

மோசேயின் வம்மிஷவரிசா
பழையேற்பாடு, யாத்திராகமம் 18 அதிகாரம்

ஆயிரம் பேருக்காயினும் ஐந்நூறுபேருக்காயினும் நூறுபேருக்காயினும் அதிபதியாயும் குருவாயுமிருந்து அவர்களை சீர்திருத்தும் ஆசான் எவ்வகையுள்ளவனாயிருக்க வேண்டும் என்றால். “சனங்களுக்குள் தேவனுக்கு பயந்து நடக்கின்றவனாகியும், உண்மையுள்ளவனாகியும் பொருளாசை அற்றவனாகியும் இருத்தல் வேண்டும்.

புதியேற்பாடு அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதின நிருபம் 1. அதிகாரம்.

கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய் குற்றஞ்சாட்டப்படாதவனும் தன் இஷ்டபடி செய்யாதவனும் முற்கோபமில்லாதவனும், மதுபான பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாபித்தை யிச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், பரிசுத்தவானும், இச்சையடக்கம் உள்ளவனுமாயிருத்தல் வேண்டும்.

வினயபிடகம்

உலகத்தில் சுகசீவிகளாக வாழவேண்டிய மக்கள் பஞ்ச சீலத்தினின்று ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்கி ஒற்றுமெயுற்று நெறுங்கி வாழ்கவேண்டியது.

இல்லறபற்றற்று துறவறவிருப்பமுற்று இறப்பும் பிறப்பும் அற்ற நிருவாணமாம் மோட்சயிச்சையுள்ளவர்கள் காட்டிற்கும் நாட்டிற்கும் மத்தியில் புத்தவிகாரமாம் அறப்பள்ளியென்னும் கூடங்களைக் கட்டுவித்து அங்கு சேர்ந்து ஞானசாதனங்களைச் செய்து முத்திபேறு பெறல் வேண்டும்.

அங்ஙனமின்றி இல்லறத்திலிருந்து முத்திபேறு பெறவேண்டுமாயின் இல்லறச் செயல்கள் யாவும் தொல்லறமாகுங்கால் நல்லறமும் பொல்லறமாகி நட்டாற்றில் விட்டநாணல்போல் முடியும்.

ஆதலின் நிருவாணமாம் மோட்ச இச்சையுள்ளவர்கள் சகலபற்றுக்களையும் அறுக்கும் தெய்வ சபையாகும் இந்திரவியாரத்தில் சேரல் வேண்டும்.

அருங்கலைச் செப்பு - பற்றறும் பத்து

அழியும் பொருளின் ஆசையறுத்தல் / வழியின் சுகமென்றுணர்.

திரிக்குறள்

பற்றற்றக் கண்ணேபிறப்பறுக்கும் / மற்றும் நிலையாமெய்க்காட்டிவிடும்.

இதை அநுசரித்தே கிறிஸ்துவின் போதனை (மத்தேயு 19. அதிகாரம் ,) நீபூரணசற்குணனாக இருக்கவிரும்பினால் உனக்குள்ள ஆஸ்திகள் யாவற்றையும் தாரித்திரர்களுக்கு கொடுத்துதவு, அப்போது பரலோக ராட்சியபொக்கிஷம் உனக்குச் சேரும்.

“ஐசுவரியவான் பரலோகராட்சியத்தில் சேரப்போகிறதில்லை.

“என்னிமித்தியம் ஒருவன் தனது வீடுவாசல்களையும், தாய்தந்தைகளையும், சகோதிரன் சகோதிரிகளையும், பெண்சாதி பிள்ளைகளையும் நிலங்களையும் விட்டொழிப்பானாயின் அவனே நித்திய சீவனையடைவான்.