பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கட்ட நடுப்பகல். வாசலில் வழி அமைத்துச் சென்று கொண்டிருந்த ரஸ்தாவில் தார் உருகியோடியது.

சாவித்திரி வாசலுக்கும்.உள்ளுக்குமாக நூறு தடவை நடந்தாள். தன்னுள் மூண்டெழுந்த பசித் தீயை அவள் உணர்ந்தாள். ஆனல், அதைப் பற்றிக் கருதவில்லை; கருத்திடை கொள்ளவும் இல்லை. கொண்டவனின் பசி அவள் இதயத்தில் இருந்த பசித்தியை இரட்டிப்புடன் அதி கரிக்கச் செய்தது. தன் பசியில் தன்னுடைய கணவனின் பசியின் கொடுமையைத்தான் அவள் உணர முடிந்தது; உணர்ந்தாள். இதயம் வேதனையை அனுபவிக்கையில், விழிகளும்தாம் சஞ்சலப்படுகின்றன. நெஞ்சின் கண்ணிர் நேத்திரங்களில் கூடி வருகின்ற விந்தையில் வாழ்க்கைப் புதிர் ஒளிந்துகொண்டிருக்கிறதோ?

கிழித்தெறியப்பட்டுக் காலமெனும் கு ப் ைப க் கூடைக்குள் திணிக்கப்பட்டு விட்ட நாட்காட்டித் தாள் களேத் தேடிப் பிடித்து ஒட்ட வைத்துப் பார்வையிட்டாள் சாவித்திரி. பிறந்த புண்ணிய பூமியின் பெரும்ையில் அவள் தன்னே மறந்தாள், அந்த இன்ப கினேவிலே திருநாளுர் அக்கிரகாரத்தின் வளப்பம் இருந்தது; அவளது இளமை காட்களின் எழில் இருந்தது; வான் வேட்டையின் சரிதை இருந்தது; ஆயிரம் ரூபாய் வரதட்சணை அறிமுகப் படுத்தி நிலைக்க வைத்த ராமசாமியின் அன்பும் அமைக் தது. விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பார்கள். அதே போல், பிறந்தகமும் புக்ககமும் அவள் வரை இதம் தந்தன. ‘மாங்குடியிலிருந்து ராமசாமி சென்னைக்கு வந்தான். எஸ். எஸ். எல். ஸி. படிப்பும் செர்வீஸ் கமிஷன் பரீட்சைத் தேர்வும் அவனுக்கு ஈரோட்டிலே ஆறு மாசத்துக்குப் பலன் தந்ததுடன் திருப்திய்டைந்தன போலும் ஆகவேதான் அவன் பட்டணத்தை நாடினன்; வேலை தேடினன். கடைசியில் தண்டையார்பேட்டையில்