இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
196
ஆழ்கடலில்
பெருங்கடலை நீந்திக்கொண்டே இருக்கவேண்டுமே தவிர, நீந்திக் கரையேற முடியாது - என இக்குறளுக்குப் பொருள் காணவேண்டும்.
வேண்டாத சொல்லை வருவிப்பதும், இருக்கும் சொல்லை நீக்குவதும் ஆகிய ஒரு பழக்கம் பரிமேலழகரிடம் உண்டு.
- "உடையார் முன் இல்லார்போல்"
- "உடையார் முன் இல்லார்போல்"
என்னும் குறளிலும் ஒரு சொல்லை வருவித்து எழுதியுள்ளமை தேவையில்லை என இந்நூலுள் முன் ஓரிடத்தில் விளக்கப்பட்டுள்ளது. மற்றும்,
- "அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
- குழல்போலும் கொல்லும் படை" [1228)
என்னும் குறளில் 'குழல் போலும்' என்பதில் உள்ள 'போலும்' என்பதை அசை எனத் தள்ளிவிட்டார். இக் கருத்துகளையெல்லாம் அறிஞர்கள் ஆய்க.
இறைவனடிகளை வணங்காதவர்கள் வீடுபேறு எய்த இயலாது என்பது இந்தக் குறளின் கருத்தாகும்.