புலவர் என்.வி. கலைமணி
125
‘இளந்தமிழன்’
மாத இதழ்
விடுதலைப் போராட்ட வீரர் நா. சோமயாஜூலு ‘இளந்தமிழன்’ என்ற திங்கள் இதழைத் தூத்துக்குடி நகரிலே துவக்கி விடுதலைப் போர் பணிக்காக நடத்தினார்.
சிங்காரவேலரின்
‘தொழிலாளன்’
பொதுவுடைமைச் சிற்பி என்று மக்களால் மதிக்கப்பட்ட ம. சிங்காரவேலர், ‘தொழிலாளன்’ என்ற பத்திரிகையைத் தொழிலாளர் நலனுக்காக உழைத்திட நடத்தினார்.
ப. ஜீவானந்தம்
‘ஜனசக்தி தாமரை’!
தமிழகப் பொதுவுடைமை தலைவர்களிலே ஒருவராகப் போற்றப்பட்ட கவிஞர், உரைநடை வீரர், ஆவேசப் பேச்சாளர், பாரதியார் பாடலின் வீர எதிரொலி, சீர்திருத்த நோக்காளரான இலக்கிய வித்தகர் ப. ஜீவானந்தம், ‘ஜனசக்தி’ என்ற பொதுவுடைமைக் கட்சி நாளேட்டைத் துவக்கி நடத்தியவர் ஆவார். அவர் விடுதலைப் போராட்ட தேசபக்தராக விளங்கித் தியாகம் புரிந்த கொள்கை வீரராகவும் வாழ்ந்தவர்.
அண்ணல் மகாத்மா அவர்கள் 1927-ஆம் ஆண்டில் தென்னாட்டிற்குச் சுற்றுப் பயணம் வந்தபோது தேசியக் காங்கிரசின் தீவிரத் தொண்டராகப் பணியாற்றி வந்த ப.ஜீவானந்தம் காந்தியடிகளுடன் சென்றார். அப்போது, சிறுவயல் என்ற கிராமத்தில் காந்தியடிகள் ஜீவாவிடம், ‘உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது என்று கேட்க, அதற்கு ஜீவா, ‘இந்தியாதான் என் சொத்து’ என்றார்.
உடனே மகாத்மா, ‘இல்லையில்லை. நீங்கள்தான் இந்தியாவின் சொத்து’ என்றாராம்’ என்று அ.மா. சாமி தான் எழுதிய ‘தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜீவாவுக்கு காந்தியடிகளிடம் எத்தகைய ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது பார்த்தீர்களா? இந்த