13
|
பத்திரிகை மன்றம்
ஏன்? எதற்காக? எப்படி?
(Press Council)
நாட்டில் இன்று நடந்துவரும் பத்திரிகைகளில் சில தரத்தோடும், பல பத்திரிகைகள் வியாபார அறிவோடும், விற்பனையை அதிகப்படுத்தும் அவரவர் சுயநல நோக்கத்தோடும், தரக் குறைவாகவும், பண்பற்ற முறையில் - மனம் போன போக்கில், தனி மனிதர்களது தகுதிகளைக் கூட மதிக்காமல், தாக்கி எழுதும் பணக் கண்ணோட்டத்தோடும், மஞ்சள் பத்திரிகை மகத்துவத்தோடும் நடைபெற்று வருகின்றன.
மேலே சுட்டிக் காட்டப்பட்ட எல்லாக் குறைகளும் நாம் கூறுவதல்ல: நமது நாட்டில் அமைக்கப்பட்ட முதல் “பத்திரிகைக் குழு”; Press Commission - இந்திய நாட்டிலே நடைபெற்றுவரும் பத்திரிகைகள் அனைத்தையும் ஆராய்ந்து கூறிய கருத்தாகும். .
மஞ்சள் தரத்தோடு சில பத்திரிகைகள் தாக்கும், போக்கும் - நோக்கும் கண்டு தாளமுடியா வருத்தத்தோடு, பத்திரிகை மன்றம் மேலும் கூறுவது என்ன தெரியுமா?