பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

செய்தியாளரும் ஒரு தசாவதானக் கலைஞரே!



ஆனால், இப்போது செய்தியாளர்கள் பெயரும் செய்திகட்குக் கீழே பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அதனால் நாள்தோறும் மக்கள் இடையே பழகும் வாய்ப்புடைய செய்தியாளர்கள் பெயரும் புகழும் பெறுகிறார்கள். அவரவர் ஊர்களிலே செய்தியாளர்களுக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் நாளும் பெருகுகிறது.

உள்ளூர் காவல்துறை, நீதித் துறை, அரசுத் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பிறத் துறைகளிலிருந்தும் செய்திகளைச் சேகரிக்கும் பணி - மதிப்பும், மரியாதையும் அவர்களுக்கு உருவாக்குகின்றது.

அதனால், அந்தச் செய்தியாளர்கள், ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரி, தாசில்தார், மருத்துவத் துறை, நீதித்துறை போன்றவற்றில், தான் ஒரு பத்திரிகைச் செய்தியாளர் என்று அடையாள அட்டையைக் காட்டி விட்டு - எந்தக் காரியத்தையும் சுலபமாகச் சாதித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகின்றன.

எனவே, ஒரு நாளேட்டிற்குச் செய்தியாளர்கள் இல்லையென்றால் நாளேடு நடக்காது; பத்திரிகைகள் இல்லையென்றால் செய்தியாளர்களுக்கும் மரியாதை கிடையாது. பழைய பெருங்காய டப்பாக்களைப் போல ஊரில் உலா வருவர். அவ்வளவுதான் எதுவும் நடந்தவரை மிச்சம்.

செய்தியாளர்களால் பத்திரிகை தகுதி பெறுகின்றது. பத்திரிகையால் செய்தியாளர் தகுதி பெறுகின்றார்கள். அதனால் செய்தித் திரட்டுவோரால் ஒரு பத்திரிகையை உருவாக்கவும் முடியும், உருக்குலைக்கவும் முடியும்.

இதைத்தான் திரு. ரெங்கசாமி பார்த்தசாரதி என்பவர், தனது ‘அடிப்படை - பத்திரிகைக் கொள்கைகள்’ (Basic Journalism) என்று நூலில் குறிப்பிடும்போது, “ஒரு செய்தித் தாளின் புகழும், நம்பிக்கையும், செய்திகளையே சார்ந்துள்ளது. அதனால், அவர்களால் ஒரு செய்தித் தாளை ஆக்கவோ, அழிக்கவோ முடியும். அவர்கள்தான் ஒரு செய்தித் தாளுக்கு வாழ்வளிக்கும் இரத்தம் போன்றவர்கள்” என்கிறார்.

‘ஒரு நாட்டின் செவிகளும், விழிகளும் பத்திரிகைகள் என்றால், செய்தி சேகரிப்போர் அதன் கால்களும் கைகளும்