பக்கம்:இந்தியா எங்கே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 63

காளைஇளையவன் கிழவர்கள் சூழ்ச்சியைக்

கண்டுமிரண்டு முரண்டுகிறான். அவன்

மூளைகொதித்தே மூட்டிய தீயினில்

முன்னின்று கத்தியைத் தீட்டுகிறான்.

வீரவிடுதலை நாட்டினிலே - இந்த

வேண்டாத தீயினை மூட்டுவதேன்?

'காரத்தை எல்லோரும் காட்டுவதேன்? பெருங்

கோரத்தினால் நம்மை வாட்டுவதேன்?

பாவியர் சூழ்ச்சிகள் மண்ணாச்சா? இங்கு

பாட்டாளி வாழ்க்கையும் பொன்னாச்சா?

நாவிலே வல்லவர் வந்தாச்சா? அவர்

நாவளம் நல்ல பணமாச்சா?

கள்ளங்கபடம் குறஞ்சதுவா? கெட்ட

கலப்பட வஞ்சம் குறஞ்சதுவா?

பள்ளம் மறஞ்சிமே டானதுவா? பழி

பாவம் மறஞ்சி நெறஞ்சதுவா?

போலிக்கு நல்ல பதவிகளபடு -

பாவிக்கு எல்லா உதவிகளா?

ஆளுக்குத் தேள்அதிகாரங்களா? இந்த

ஆகாத வேதனை தீர்ந்ததுவா?

மன்னாதி மன்னரை மாத்திப்புட்டோம்அவர்

மானியத்தைக்கூட வெட்டிப்புட்டோம்இங்கு

தின்னூட்டுப்பேசற திண்ண்ை அரசியல் தேவாங்கு நம்மை மிரட்டுவதா?

மன்னரை ஒட்டிமிரட்டிப் புட்டோம் - இன்று

மந்திரி நம்மை மிரட்டுவதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/65&oldid=537626" இலிருந்து மீள்விக்கப்பட்டது